Friday, 17 June 2011

ஃபுகுஷிமா முயலுக்கு வைத்த ஆப்பு ! (Fukushima Mutant Rabbit)

இந்த உலகில் ஆக்கங்கள் ஒரு பக்கம் தன் முகம் காட்டிகொண்டிருக்க
அழிவுகள் தன் மறுமுகத்தை காட்டிக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் அதாவது கடந்த மார்ச் மாதமளவில் ஜப்பானில் ஏற்பட்ட FUKUSHIMA அணு மின்நிலையத்தின் மூன்றாவது அணு உலை வெடித்ததன் காரணமாக வெளியான அணுக்கதிர் வீச்சு தற்போது இருமடங்கான நிலையில் செவிகள் அற்ற நிலையில் ஒரு முயல்குட்டி பிறந்துள்ளது, அதுவும் FUKUSHIMA உலையிலிருந்து 18 மைல் தூரத்தில்.

அந்த முயல் குட்டியை நீங்களும் பாருங்க

அணுக்கதிர் வீச்சு முயலின் மரபணுவில் தீடீர் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளமையே (மரபணு விகாரம்) இதற்கு காரணம் என விஞ்ஞானிகளால் அஞ்சப்படுகிறது.

மரபணு விகாரம் காலா காலமாக இடம் பெற்று வருவது ஒன்றும் புதிதல்ல ஆனால் இப்போ உலகம் போற போக்கை பார்த்தல், அதில் இடம் பெரும் எதிர்பாராத நிகழ்வுகளினால் மாதக் கணக்கிலேயே அதன் விளைவுகளை நாம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது.


ஆனா இதை என்னவென்று சொல்வது ?

Fukushima mutant rabbit: "An earless bunny has been discovered just outside the radiation zone of the Fukushima nuclear plant in Japan."


நாயகன் பாணியில் ஒரு கேள்வி /பதில்

இது நல்லதுக்கா கேட்டதுக்கா...? தெரியலேயேப்பா..........


(POST A COMMENT ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன)

8 comments:

  1. haiyooo sad for the Rabbit..............

    ReplyDelete
  2. haiyoo feel for the rabbits in fukushima..........

    ReplyDelete
  3. //இப்போ உலகம் போற போக்கை பார்த்தல், அதில் இடம் பெரும் எதிர்பாராத நிகழ்வுகளினால் மாதக் கணக்கிலேயே அதன் விளைவுகளை நாம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.//

    உண்மை தான்... நாளுக்கு நாள் அணு மட்டுமில்லாது ஏனைய அசாதாரண காரணிகளாலும் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க முடியாதுள்ளது. அதனால் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை உயிரங்கிகளில் இயற்கையாக நிகழும் "கூர்ப்பு" மாற்றத்தினை ஒரு சில மாதங்களுக்குள் எமகண் முன்னே காணவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது..!! இது கவலைக்குரிய விடயமே..!!

    ReplyDelete
  4. @ NIMI & Pattersons

    tks a lot for ur time and comment

    @Logesh
    ungal varugaikku nandri.. enna seiya ..ithu thaan naangal vaazhum ulagam...aiyaho...

    ReplyDelete
  5. உலகத்தின் போக்கில் வந்த விளைவை உங்கள் பார்வையோடு பதிவாக்கியிருக்கிறீர்கள்.
    சிறப்பு

    ReplyDelete
  6. இயற்கையோடு வாழ்வது நல்லது. சூரிய சக்தியை பயன்படுத்த பழகுவது இலங்கை போன்ற நாடுகளுக்கு சிறந்தது. சூரிய கலன்களில் இருந்து Solar cells சிக்கனமாக எரிவாயுச்செலவின்றி மின்சாரம் பெறலாம், இதன் விலை குறைந்து வருகிறது. இந்தியா 2020 இல் 20 GW மின்சாரத்தை பெற விழைகிறது
    ng.”

    சீக்கிரம் கோர் பாதிப்பு கோட்டை கேல்ஹம் அணு ஆலையில் USA
    http://modernsurvivalblog.com/nuclear/fort-calhoun-nuke-plant-feet-away-from-core-damage/

    ReplyDelete
  7. இது நல்லதுக்கா கேட்டதுக்கா...? தெரியலேயேப்பா..........
    :(

    ReplyDelete