Friday 11 December 2009

இறுதியும் உறுதியுமாய்


யப்பாடா ஒரு மாதிரி கிளைமாக்ஸ்க்கு வந்தாச்சு
ரப்பரை விட மிக மோசமாக இழுபட்ட இந்த தொடர் பதிவுகளில் இன்று இறுதிக்கட்டமாய்....

பணம்

இந்த ஒன்று தான் தினம் தினம் உலகை கவ்விக்கொண்டிருக்கிறது.
இங்கு எல்லாமே இதை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவனை மதிக்கவைப்பது .... மிதிக்க வைப்பது இந்தப்பணம்.

எத்தனையோ நல்ல செயல்களில் இருந்து இழி செயல்கள் வரை ஊடுருவும் பணத்தை யாருமே உதறித்தள்ளி விட்டு வாழ்வதென்பது நம் யாராலேயுமே இயலாத காரியம்.

கீதை குறிப்பிடுவது போன்று ...


எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
பணத்தின் கதியும் இது தானே.....

பணத்தில் மிதப்பவர்களும் சரி பணம் இன்றிக் கிடப்பவர்களும் சரி... இந்த வாசகம் மொழியப்பட்டது எம் ஒவ்வொருவருக்காகவும் தான்.

மனிதன் தனக்கு எது எதுவெல்லாம் நன்மை பயப்பதாக நினைக்கிறானோ அதையெல்லாம் கடவுளாக்கி பார்க்கும் சிந்தனை கொண்டவன். அதனால் இந்தப் பணத்தையும் கூட அவன் விட்டு வைக்கவில்லை.

இந்தப் பணத்துக்குள் தம்மை தொலைத்து விட்டு எம்மில் பலர் காலம் கடந்து வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த யுகத்தில் பணத்தோடு வாழ்க்கை என்பதை விடுத்து வாழ்க்கைகாக பணம் என்ற பக்குவத்தோடு வாழப்பழகிக்கொண்டால்

பணம் - நல்ல நண்பன்
இல்லாவிடின்

பணம் - என்றும் காலன்.


பின் குறிப்பு :

இந்த 'பணம்' தலைப்பில் நான் பதிவிட எண்ணியது வேறு ஆனால் பதிந்தது வேறு. இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த எண்ணத்தை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.
இனி வரவுள்ள என் பதிவிற்காக நேரம் அதிகம் தேவைப்பட்டதால் இந்த பதிவை சாதாரணமாக முடித்துள்ளேன்.


அடுத்து வரும் பதிவு என்ன ????? முடிந்தால் ஊகியுங்கள் ...காத்திருங்கள்...

என்னது க்ளு வேணுமா ? OK


என்னைப்பார் என் கண்ணைப்பார்

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

1 comment:

Nimalesh said...

short ahh irunthalum sweet ah iruke Dye......lol
Watz Next?????/