Friday 11 December 2009

Titanic சாதனையை தகர்க்கவரும் சினிமாவின் புது அவதாரம் - AVATAR


பிரம்மிக்க வைக்கும் தொழிநுட்ப விருந்தின்றி நீண்ட நாட்களாக வாடி வறண்டு வற்றிப்போய் இருக்கின்ற கண்களுக்கு முப்பரிமாணவிருந்து படைக்க தயாராகிக்கொண்டிருக்கிறது 'அவதார்'.

டிசம்பர் 18 - என்னதான் இந்த திகதி வேட்டைக்காரன் திரைப்படத்தை ஞாபகப்படுத்தினாலும், அதிக பட்ச பரபரப்புடன் உலகை ஒரு உலுக்கு உலுக்கத்தயாராகி வரும் AVATAR, வசூல் சாதனைப்படமான
TITANIC ஐ கவிழ்க்கும் திரைப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

JAMES CAMERON இன் சாதனையை இந்தப்பன்னிரெண்டு வருட காலத்துக்குள் யாரும் முறியடிக்காததால் அவர் அவ(தா)ர் மூலமாக தானே முறியடிப்போம் என கிளம்பிட்டாரோ ?என்னவோ ..

புதுவித சாகச தொழினுட்பங்கள், அவற்றின் ஆழமான பயன்பாட்டை நாம் பொதுவாக JAMES CAMERON இன் திரைப்படங்களில் காணலாம். சிறந்த உதாரணங்கள் THE TERMINATOR - 1984 , ALIENS -1986 , TERMINATOR 2 : JUDGEMENT DAY -1991, TITANIC -1997

அந்தவகையில் இந்த AVATAR உம் தொழிநுட்பத்தில் புதுவித அவதாரமெடுக்கிறது.
இந்த தொழிநுட்ப வேலைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் என கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இந்த தாராள செலவை செய்திருக்கும் நிறுவனம் லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மெண்ட் (LIGHT STORM ENTERTAINMENT). 20TH CENTURY FOX வெளியிடுகிறது .

என்னதான் உத்தியோகபூர்வமாக உலகளாவிய ரீதியில் இது டிசம்பர் 18 வெளிவர இருந்தாலும் நேற்று லண்டனில் பிரிமியர் கட்சிகள் அரங்கேறி விட்டது. படத்தை பார்த்தவர்களிடம் இருந்து நேர் கருத்துக்களை அறியக்கூடியதாகவும் உள்ளது. எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என உறுதியாக நம்பப்படுகிறது. இந்த AVATAR , TITANIC பட வசூல் சாதனையை முறியடிக்கும் இந்தப்படத்தின் 3D தன்மை அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திகொடுக்கும் என பரவலாக பேசப்பட்டாலும், சாதரணமாக எல்லாத்திரையரங்குகளிலும் இவ்வசதியைஎதிர்பார்க்க முடியாது. எனவே இந்த AVATAR அவதார சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்தக்கதையின் சுருக்கம்


கடற்படை நாயகன் 'ஜாக்'குக்கு (சாம் வொர்திங்டன்) ஒரு போரில் காயமடைந்து அவனுடைய இடுப்புக்குக்கீழ் பகுதி செயலிழந்து போன நிலையில், பண்டோரா என்ற 'நவிகள்' வசிக்கும் கிரகத்துக்கு போகும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு வசிக்கும் இந்த நவிகள் மனிதர்களை விட அதியுயர் சக்தி படைத்தவர்கள். அவர்களையும் அந்தக் கிரகத்தையும் ஆராய்ச்சி செய்யும் குழுவில் இணையும் நாயகனுக்கு தனது கால்களை பெற்று மீண்டும் நடமாடத்தக்கதான சந்தர்ப்பமும் அமைகிறது. சாதரணமாக பண்டோரா கிரகத்தில் மனிதர்கள் சுவாசிக்க முடியாது. இதன் காரணமாக மனித DNA கொண்டு நவிகளை உருவாக்கி அந்த கிரகத்துக்குள் நுழையவிட வேண்டிய தேவை ஆராய்ச்சி குழுவுக்கு ஏற்பட இந்தத்தேவை ஜாக்குக்கு புது அவதாரத்தை கொடுக்கிறது.



3 மீட்டர் உயரம், நீலநிற உடல், நீண்ட வால் என ஒரு புதுவித தோற்றத்தை தன் வசப்படுத்திக்கொள்கிறார்.

''The Avatars are living, breathing bodies that are controlled by a human "DRIVER" through a technology that links the driver's mind to their Avatar body ''.

பண்டோரா கிரகத்தின் அழகிலும் புதுமைகளிலும் தன்னை மறக்கும் நாயகன் நவிப்பெண் ஒருத்தியிடம்(நேத்ரி) தன் மனதை பறி கொடுக்கிறான்.

இனி ஜாக் சாயப்போவது எந்தப்பக்கம் மனிதர்கள் பக்கமா ?? நவிகள் பக்கமா ??

படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்க. இப்போது முன்னோட்டம் மட்டும் உங்களுக்காக



இந்தப்படத்திலும் காதலின் சாயத்தை இயக்குனர் தொட்டிருப்பதால் TITANIC போலவே அதை சரியான விதத்தில் கொண்டு சென்று இதை மனது மறக்காத ஒரு படைப்பாக்குவார் என்று நம்பலாம்.

இந்தப்படம் ஜேம்ஸ் கமேரோனின் கனவுப்படங்களில் ஒன்று. காரணம் சிறுவயதில் இவர் வாசித்த பல அறிவியல் புனைகதைகள் அவை தந்த பாதிப்புகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி தந்துள்ள படம் தான் இந்த 'அவதார்' என்பதை அவருடைய நேர்காணல்களில் இருந்து அறியக்கூடியதாய் உள்ளது.

TITANIC திரைப்படத்தின் பின் கிட்டத்தட்ட 12 வருடங்கள் இந்தப்படத்துக்காக அவர் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அது மட்டுமல்ல இதில் அவர் பயன்படுத்தியுள்ள 3Dடெக்னாலஜி ஹாலிவுட் சினி உலகின் இன்னொரு படி.
அத்தோடு முகபாவங்களை மிகத்துல்லியமாக படம்பிடித்து அதை டிஜிட்டல் உருவங்களோடு ஒன்றிணைத்து, நடிகர்களை கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இணையாக ஓட விட்டு, நடிக்கவைத்து நிஜம் எது கிராபிக்ஸ் எது என பிரித்தரியாதளவுக்கு தன் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறாராம். இந்தப்படத்தில் 40 % உண்மை, 60 % - கணணி வித்தை என்றாலும் படம் பார்க்கும் போது அது தெரியாதளவுக்கு இருக்கவேண்டும் என அதிக சிரத்தை எடுத்து தன் கனவுப்படத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்திருக்கும் JAMES CAMERON , இந்தப்படத்துக்கான ஆஸ்கார் கனவுகளோடும் காத்திருக்கிறார்.

நாமும் காத்திருப்போம் படத்தைப்பார்ப்பதற்காக....
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

இறுதியும் உறுதியுமாய்


யப்பாடா ஒரு மாதிரி கிளைமாக்ஸ்க்கு வந்தாச்சு
ரப்பரை விட மிக மோசமாக இழுபட்ட இந்த தொடர் பதிவுகளில் இன்று இறுதிக்கட்டமாய்....

பணம்

இந்த ஒன்று தான் தினம் தினம் உலகை கவ்விக்கொண்டிருக்கிறது.
இங்கு எல்லாமே இதை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவனை மதிக்கவைப்பது .... மிதிக்க வைப்பது இந்தப்பணம்.

எத்தனையோ நல்ல செயல்களில் இருந்து இழி செயல்கள் வரை ஊடுருவும் பணத்தை யாருமே உதறித்தள்ளி விட்டு வாழ்வதென்பது நம் யாராலேயுமே இயலாத காரியம்.

கீதை குறிப்பிடுவது போன்று ...


எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
பணத்தின் கதியும் இது தானே.....

பணத்தில் மிதப்பவர்களும் சரி பணம் இன்றிக் கிடப்பவர்களும் சரி... இந்த வாசகம் மொழியப்பட்டது எம் ஒவ்வொருவருக்காகவும் தான்.

மனிதன் தனக்கு எது எதுவெல்லாம் நன்மை பயப்பதாக நினைக்கிறானோ அதையெல்லாம் கடவுளாக்கி பார்க்கும் சிந்தனை கொண்டவன். அதனால் இந்தப் பணத்தையும் கூட அவன் விட்டு வைக்கவில்லை.

இந்தப் பணத்துக்குள் தம்மை தொலைத்து விட்டு எம்மில் பலர் காலம் கடந்து வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த யுகத்தில் பணத்தோடு வாழ்க்கை என்பதை விடுத்து வாழ்க்கைகாக பணம் என்ற பக்குவத்தோடு வாழப்பழகிக்கொண்டால்

பணம் - நல்ல நண்பன்
இல்லாவிடின்

பணம் - என்றும் காலன்.


பின் குறிப்பு :

இந்த 'பணம்' தலைப்பில் நான் பதிவிட எண்ணியது வேறு ஆனால் பதிந்தது வேறு. இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த எண்ணத்தை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.
இனி வரவுள்ள என் பதிவிற்காக நேரம் அதிகம் தேவைப்பட்டதால் இந்த பதிவை சாதாரணமாக முடித்துள்ளேன்.


அடுத்து வரும் பதிவு என்ன ????? முடிந்தால் ஊகியுங்கள் ...காத்திருங்கள்...

என்னது க்ளு வேணுமா ? OK


என்னைப்பார் என் கண்ணைப்பார்

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday 7 December 2009

தொடர்வது 'அழகு'

நீண்ட ஒரு இடைவேளைக்குப்பின்
வந்தியத்தேவன் அண்ணா அறைகூவல் விடுத்திருந்த தொடர் பதிவுத் தலைப்புகளில் மூன்றாவது இன்று களம் காணப்போகிறது...


அழகு

உண்மையில் அழகானவை என்று சொல்லப்படுபவை கண்களால் பார்க்கப்படுபவை அல்ல:அவை மனத்தால் மட்டுமே உணரப்படக்கூடியவை.

இதை இன்னும் தெளிவா சொல்வதென்றால்,

The best and most beautiful things in the world cannot be seen, nor touched ...
but are felt in the heart.
-- Helen Keller


ஆழமா கொஞ்சம் யோசிச்சா இதன் அர்த்தம் புரியும்.

இந்த உலகில் சில உண்மைகள், சில உறவுகள், சில உணர்வுகள் வரையறுக்க முடியாத பெறுமதியோடு... உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்ல....

என்னைப்பொறுத்தவரை மேலே நான் குறிப்பிட்டது போல
மனதினால் உணரப்படக்கூடியவை மட்டும்தான் உண்மையான அழகோடு வலம் வருபவை.


அன்பு
கருணை

நம்பிக்கை

இந்த மூன்றையும் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதன் நிலை மாறாது. இந்த ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகினை மனதுக்குள் தூவுகின்றன.

உறவுகளுடனான பந்தத்தை உறுதிப்படுத்துவது
-அன்பு


பிற உயிர்களுடன் உயிர்ப்பாய் இருக்கச்செய்வது
-கருணை
இறைவன் என்ற விடைகாணமுடியாத கேள்விக்கு பதிலாய் அமைவது
-நம்பிக்கை
(உங்களுக்குள் உங்களைத்தேடி விடை காண வைப்பது
தன்னம்பிக்கை)

Real beauty is CONFIDENCE in yourself என்று கூட சொல்வார்கள்.

இந்த மூன்றும் யாரிடம் வற்றாத ஊற்றாக இருக்கின்றதோ அந்த மனிதன்தான் இம்மையிலும் மறுமையிலும் உண்மையிலேயே பேரழகன்.

அன்பென்ற மழையில் அகிலங்கள் நனையட்டும்
கருணைக்கடலில் உலக உயிர்கள் கலக்கட்டும்
இறைவன் என்ற முடிவிலியில் பேரானந்தம் நிலைக்கட்டும்

இப்போது எது அழகு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

அடுத்து தொடர்பதிவின் இறுதித்தலைப்பு ''பணம்'' - எப்ப வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது .. எனக்கு பதிவிட நேரம் கிடைக்கும் போது வரும்....


வரட்டா .....!
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday 30 September 2009

AFRO NISHA வா ?A.R.Rஆ ?


கடவுள் காதல் அழகு பணம் என்றதொடர்பதிவுக்கிடையில்
ஒரு சின்ன பிரேக்(கிங் நியூஸ்)

குறு குறு கண்களிலே என்னை அவள் வென்றாளே
குறு குறு கண்களிலே என்னை அவள் தின்றாளே
இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்

சிறு சிறு பெண்ணிலவே என் துணை ஆவாளோ
சிறு சிறு பெண்ணிலவே என் துயர் தீர்ப்பாளோ

இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்

குறு குறு கண்களிலே என்னை அவள் வென்றாளே
குறு குறு கண்களிலே என்னை அவள் தின்றாளே

இந்தப்பாட்டு தான் இந்த இரண்டு நாளாக என்னை ஆட்கொண்டிருக்கும் பாடல்..
இசையால் சர்வதேசம் தொட்ட இசைப்புயலின் இசையில் கடந்த வாரம் வெளியாகி இருந்த COUPLES RETREAT என்ற ஹாலிவுட் திரைப்படப்பாடல்களில் ஒன்றாக இணையத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் இது தொடர்பான சர்ச்சை ஒன்று நிலவி வரும் வேளையில் இந்தப்பதிவு கொஞ்சம் பொருத்தமாவும் இருக்கும் என நினைக்கிறேன். இந்த குறித்த பாடலை தரவிறக்கம் செய்ய இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்திய போது AFRO NISHA என்ற பெயரே காணப்பட்டது.

பாடலை பலமுறை கேட்டும் அந்தப்பாடல் அந்த குறித்த நபரால் பாடப்பட்டது என்பதை நம்பவே முடியவில்லை. காரணம் அந்தக்குரல் இசைப்புயலின் குரலாகவே எனக்குப்பட்டது. மிகுந்த குழப்பத்தில் இன்னும் இன்னும் தேடுதல் வேட்டை நடத்திய போது INDIA GLITZ இலும் அதை உறுதிப்படுத்தினர்.
http://www.indiaglitz.com/channels/tamil/article/50296.html

சரி ..AFRO NISHA . ஒரு பெண் பெயராக இருக்கிறதே என்று அவர் பற்றிய குறிப்புகள் தேடியபோது ஊ..ஹும் ஒரு மண்ணும் கிடைக்கவில்லை. இன்று பாடலை வானலையில் ஒலிக்கவிட்டு பாதி மனத்துடன் நானும் இந்த பாழாய்ப்போன AFRO NISHA பெயரைத்தான் சொன்னனான். சரி பிழையாக இருந்தால் யாராச்சும் நம்ம நேயர்கள் சுட்டிக்காட்ட மாட்டார்களா என்ற ஒரு எதிர்பார்ப்பில்... அதுக்கும் எந்தப்பலனும் இல்லை. குழப்பம் இன்னும் அதிகரித்த நிலையில் முகப்புத்தகத்திலும் இதைப்பற்றி குறிப்பிட்டபோது.. அமீர் இன்னொரு பக்க தேடுதலோடு வந்தார் ''TWITTER இல் பாடகி சின்மை அதை A.R.R பாடியிருப்பதாக உறுதிப்படுத்தினார் என்று. (உள்ளூர ஒரே சந்தோசம்... நம்ம கணிப்பு தப்பாகவில்லை என்று)

ஒருவேளை பாடலுக்கு இடையிடையே ஒரு ஆண் குரல் HUM வருகிறது.. அதுக்கு சொந்தக்காரர் தானோ இந்த AFRO NISHA??

எது எப்படியோ பாடலை கேட்டுட்டு நீங்களும் சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க!


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Tuesday 22 September 2009

மனிதன் உணர்ந்துகொள்ளும் மனிதக்'காதல்'


''காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்''

என்ற என் மானசீக கவிக்குரு மகாகவி பாரதி மொழிந்தது போல் காதல் வாழ்க்கையினின்றும் போயிடின் வாழும் வாழ்க்கையே சாவைபோல் இருக்கும்.


காதலில்லாதவன் வாழ்க்கை 'சாவாகும் சம்பவமாகிறது'.
காதலுடன் வாழ்ந்து மரித்தவனின் வாழ்க்கை 'வாழும் சரித்திரமாகிறது'!

இதுவரை காலமும் நாங்கள் அறிந்த காதல் வரலாறுகள்தான் எத்தனை அவற்றுள் புதைந்து கிடக்கும் உண்மைகள்தான் எத்தனை எத்தனை....
விதவிதமாய் காதல் வயப்பட்டு காதலை மொழிந்த காதலர்கள் எத்தனை அவர்கள் பொறித்துச்சென்ற (சாகா)சரித்திரங்கள்தான் எத்தனை எத்தனை....

அறியாதவரை அறியும்படித்தூண்டுவதும்....
அறிந்தபின் அதன் வாயிலாகப் பேரின்பம் ஊட்டுவதும்
அது தரும் அனுபவங்கள் வழியே வாழ்க்கையின் பெரும் பகுதியைப்புகட்டுவதும்
காதலன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்??


மொழி, இனம், மதம் என.... அனைத்தையும் கடந்ததாய் காதல்...(ஆமா இது எங்களுக்கு தெரியாதாக்கும் என்று கேட்கிறீங்களா? பரவாயில்லை... உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி சொல்லிக்காட்டுவதை இப்பதிவு விரும்புகிறது)


''எல்லாக்கடவுளும் ஏற்றுக்கொள்ளும் ஒரே கடவுள் காதல்''
''எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரே ரத்தம் காதல்''

உள்ளம் கேட்டு, உணர்ந்து ஏற்றுக்கொண்ட பாடல் வரிகள் இவை..
என் மனம் கவர்ந்த வரிகளாயும்...என் வாழ்க்கையில் ஒன்றிப்போன வரிகளாயும்...

கா -'கா'த்திருத்தல் (காதலன்/ காதலிக்காக காத்திருத்தல்)
- ''வித்திருத்தல் (அவன்/ அவள் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக தவித்திருத்தல்)
ல் - இ'ல்'லாமற்போதல் (காதலனோடு/ காதலியோடு இருக்கும்போது தன்னிலை மறந்து தனக்குள்ளேயே தொலைந்து இல்லாமற்போதல்)

இது ....ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து படித்து ரசித்த ஒரு வரைவிலக்கணம்... முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்ட ஒன்றுதான்... மீண்டும் இப்பதிவுக்காக ஞாபகப்படுத்தினேன் .

நிச்சயமாக காதல் பற்றிய பாடம் நடத்துவதற்காக அல்ல இந்தப்பதிவு .. ஆனால் நம் யதார்த்த வாழ்க்கையுடன் ஒன்றிப்போன காதலோடு காதலாக.... கசிந்து கண்ணீர் மல்க வைத்த.... உள்ளம் ஊடுருவிச்சென்ற காதல் பற்றிய வரிகளையும் பகிர்வதற்கே.

ஏதோ நம்மால முடிந்தளவுக்கு ஓரிரு வரிகளை எடுத்துவிட்டு ஆரம்பித்துவைத்தாகிற்று.. இனி இந்தத் தொடர்பதிவில் பின்னூட்டங்களாக தொடரப்போவது உங்கள் வாழ்க்கையில் பொறிக்கப்பட்டிருக்கும் காதல் வரிகள்.
நீங்கள் வடித்த/கேட்ட கவிதைகள், சினிமாப்பாடல்கள் என எதுவாகவும் இருக்கலாம்.... உங்களைப்பாதித்த காதல்வரிகள் பின்னூட்டங்களாய் களைகட்டட்டும்..

பி.கு - அனுபவம் இல்லாதவர்கள் இன்று போய் காதல்கண்ணாடியில் முகம்பார்த்தபின்னர் இங்கு மறக்காமல் வந்து பின்னூட்டுங்கள்..

ஒருமாதிரி 'வந்தி' அண்ணாவின் தொடர்பதிவு-அழைப்புக்கான இரண்டாவது தலைப்பையும் அரங்கேற்றியாச்சு... அடுத்தது என்ன?(அழகு?? பணம் ??) சிறிய இடைவேளையின்பின் தொடரும்... (ச்சே எவ்வளவு முயன்றாலும் இது தொடருது)
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday 21 September 2009

தொடர்பதிவு COUNTDOWN ஆரம்பம்

தொடர்பதிவுகளுக்காக என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு வந்தியத்தேவன் அண்ணாவுக்கு முதற்கண் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

அவர் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் அழகு, காதல், கடவுள், பணம் இந்தத் தலைப்புகளில் குளுக்கல்ஸ் முறையில் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு

கடவுள்
இந்த ஒன்றைத்தான் இன்னமும் 'அடிமுடியின்றி' மனிதன் தேடிக்கொண்டிருக்கிறான்......

சிலருக்கு கடவுள் அன்பாக, சிலருக்கு பணமாக, சிலருக்கு கல்வியாக, இன்னும் சிலருக்கு நம்பிக்கையாக....

இன்னும் சிலர் தங்களுக்குள்ளேயே(பக்குவப்பட்டவர்களாம்) இதை தேடுகின்றனர்... அவரவர் உள்ளங்களை, சூழ்நிலைகளைப்பொறுத்து கடவுள் என்பவர் உயிர்பெறுகிறார்..குறிப்பாக மனிதன் மனதில்.

கடவுளைப்பற்றி கூறும் அளவுக்கு, வரைமுறைப்படுத்தும் அளவுக்கு இவ்வுலகில் யாருக்காவது 'சக்தி' இருக்குமாயின் அவரே இப்புவிதனை ஆழ்பவராக இருப்பார். அப்படி ஒருவரை 'நான்' இதுவரை கேட்டதுமில்லை காணவுமில்லை. நீங்கள்??

நானும் கூட பலமுறை கடவுள் என்பவர் யார் என்ற கேள்வியை பலமுறை எனக்குள்ளேயே கேட்டுப்பார்த்ததுண்டு... விடை.. ஹும்.. ஒருநாளும் கிடைத்ததில்லை...

ஆனால் அவ்வப்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் உணர்ந்திருக்கிறேன்...
ஆம் கடவுளை நான் உணர்ந்திருக்கிறேன் ...
என் தாய் மூலமாக, தந்தை மூலமாக, நண்பர்கள் மூலமாக, ஆசிரியர்கள் மூலமாக, வழிகாட்டிகள் மூலமாக...
ஏன் சிலவேளைகளில் எதிர்ப்படும் ஊர் பெயரே தெரியாதவர்கள் மூலமாகக்கூட
இப்படி..

சிலவேளைகளில் எங்களுக்குள்ளேயே ஒருகுரல் கேட்கும்.. அதை இப்படி செய்யாதே அப்படி செய் என்று..
(உங்களுக்கும் கேட்டிருக்கா ?-இதத்தான் சிலர் சொல்வீங்க பட்சி சொல்லுதுன்னு)
அதுகூட எம்மை வழிநடத்தும் 'கடவுள்' தானோ என்று பலமுறை நான் எண்ணிக்குழம்பியதுண்டு..


பசித்து வந்த ஒருவனுக்கு புசிக்கக்கொடுத்தவன் கடவுளாகிறான்.. உயிர்போகும் வேளையில் ஒருவனுக்கு உயிரை மீட்டுத்தருபவன் கடவுளாகிறான்..
ஆனால் ஒரு விஷயம் கடவுள் என்ற பெயரை சூட்டியவன் கடவுளை உணர்ந்தானோ இல்லையோ ஆனால் சரியாகவே சூட்டியிருக்கிறான்..

'கட'+ 'உள்' = கடவுள் எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுக்குள்ளேயும் இருப்பதைத்தான்
இப்பதம் குறிக்கிறது.(இந்துக்கள் பிரயோகிக்கும் பதம்)


இஸ்லாமிய நண்பர்கள் - 'இறைவன்' என்கிறார்கள்.
உண்மைதான் 'இறை' என்பது நம்பிக்கை. 'வன்' என்பது கடினம்.
அசைக்கமுடியா நம்பிக்கை இறைவன் மீதுள்ளதே இஸ்லாமியர்களிடம் !


கிருஸ்தவ நண்பர்கள் - 'ஆண்டவர்' என்கிறார்கள் 'சகலவற்றையும் ஆழ்பவர்' அல்லது 'ஆண்டாண்டு காலமாய் தம்மை ஆண்டு கொண்டிருப்பவர்' என பொருள்படுகிறது.
ஆண்டவர் என்றும் தம்மை ஆட்சிபுரிந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையில் கிருஸ்தவர்கள் !


'கடவுள்' என்பது சொற்கள் போன்ற இன்ன பிறவால் வேறுபடுத்தப்பட்டாலும் உணரப்படும் தன்மையால் என்றும் நிலைத்து நிற்கின்றார் என்பது மட்டும் நித்தியம்.

"அவனின்றி அணுவும் அசையாது. அவன் விசையால் அத்தனையும் அசையும்"

ஆனால் மனதை நெருடிக்கொண்டிருக்கும் ஒரே ஒரு கேள்வி..
ஆண் பெண் இந்த இருநிலைகளையும் கடந்தவர் அல்லவா கடவுள் அப்படியென்றால் கடவுளை ஏன் பொதுவாக ஆண்பாலாய் உருவகப்படுத்தியிருக்கிறார்கள் ??

கேள்விக்கான விடையை யோசிப்பதோடு அடுத்த பதிவுத் தலைப்பையும் (காதல், அழகு, பணம் இந்த மூன்றில் ஒன்று) சொல்லிவிட்டுப்போங்க 'ராசா'மாரே 'ராசாத்தி'மாரே!

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday 16 September 2009

பழமிருக்கும்... பசியிருக்கும்... பாலிருக்காது

This is an Email information i got from My well-wisher Sachi(Sachiaynathan) Uncle...Thanks a LOT for sharing with me..

And now im sharing these with U


It's long but very informative so please take some time to read

We all think eating fruits means just buying fruits, cutting it and just popping it into our mouths. It's not as easy as you think. It's important to know how and when to eat..


What is the correct way of eating fruits?

IT MEANS NOT EATING FRUITS AFTER YOUR MEALS! * FRUITS SHOULD BE EATEN ON AN EMPTY STOMACH.

If you eat fruit like that, it will play a major role to detoxify your system, supplying you with a great deal of energy for weight loss and other life activities.


FRUIT IS THE MOST IMPORTANT FOOD. Let's say you eat two slices of bread and then a slice of fruit. The slice of fruit is ready to go straight through the stomach into the intestines, but it is prevented from doing so.

In the meantime the whole meal rots and ferments and turns to acid. The minute the fruit comes into contact with the food in the stomach and digestive juices, the entire mass of food begins to spoil....


So please eat your fruits on an empty stomach or before your meals! You have heard people complaining - every time I eat watermelon I burp, when I eat durian my stomach bloats up, when I eat a banana I feel like running to the toilet etc - actually all this will not arise if you eat the fruit on an empty stomach. The fruit mixes with the putrefying other food and produces gas and hence you will bloat!


Graying hair, balding, nervous outburst, and dark circles under the eyes all these will NOThappen if you take fruits on an empty stomach.


There is no such thing as some fruits, like orange and lemon are acidic, because all fruits become alkaline in our body, according to Dr. Herbert Shelton who did research on this matter. If you have mastered the correct way of eating fruits, you have the Secret of beauty, longevity, health, energy, happiness and normal weight.


When you need to drink fruit juice - drink only fresh fruit juice, NOT from the cans. Don't even drink juice that has been heated up. Don't eat cooked fruits because you don't get the nutrients at all. You only get to taste. Cooking destroys all the vitamins.


But eating a whole fruit is better than drinking the juice. If you should drink the juice, drink it mouthful by mouthful slowly, because you must let it mix with your saliva before swallowing it. You can go on a 3-day fruit fast to cleanse your body. Just eat fruits and drink fruit juice throughout the 3 days and you will be surprised when your friends tell you how radiant you look!


KIWI:Tiny but mighty. This is a good source of potassium, magnesium, vitamin E & fiber. Its vitamin C content is twice that of an orange.


APPLE:An apple a day keeps the doctor away? Although an apple has a low vitamin C content, it has antioxidants & flavonoids which enhances the activity of vitamin C thereby helping to lower the risks of colon cancer, heart attack & stroke.


STRAWBERRY:Protective Fruit. Strawberries have the highest total antioxidant power among major fruits & protect the body from cancer-causing, blood vessel-clogging free radicals.


ORANGE :Sweetest medicine. Taking 2-4 oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones as well as lessens the risk of colon cancer.


WATERMELON:Coolest thirst quencher.. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione, which helps boost our immune system. They are also a key source of lycopene - the cancer fighting oxidant. Other nutrients found in watermelon are vitamin C & Potassium.


GUAVA & PAPAYA:Top awards for vitamin C. They are the clear winners for their high vitamin C content. Guava is also rich in fiber, which helps prevent constipation. Papaya is rich in carotene; this is good for your eyes.


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf