Wednesday 25 March 2009

மீனுக்கு சொந்தக்காரர் யார்?- யோசிக்க வைத்தவர் ஐன்ஸ்டீன்!

காத்திருந்த அன்பர்களே நண்பர்களே ... இதோ என்னுடைய சின்ன மூளையை கசக்கிப்பிழிந்து ஐன்ஸ்டீன் பூட்டாவின் கேள்விக்கான விடையை கண்டுபிடித்துள்ளேன். இந்த விடை சரி என்றால் அந்த 2% க்குள் நானும் அடக்கம்....... இல்லை என்றாலும் கூட அதே 2%க்குள் தான்.. அப்டின்னு சொல்லி மனசை தேற்றிக்கொள்கிறேன்... விடுங்க ...

(புதிதாக இந்த வலைப்பூவில் நுழைந்தோர் கவனிக்க: இப்பதிவில் கொடுக்கப்பட்ட பதிலுக்கான கேள்விக்காக கீழ்நோக்கி ஒன்று விட்ட பதிவை விசிட் செய்யவும். அதுக்குப்பிறகு இங்கு மூக்கை....மன்னிக்கவும்... பார்வையை நுழைக்கவும்)

சரி நான் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி கண்டுபிடித்த விடையில் முரணின்றி அமைந்த அமைப்பினை கீழே தந்திருக்கிறேன்...

Nationality - Colour
- Beverage - Smoke Brand - Pet
Norwegian - Yellow - Water - Dunhill - Cats
Dane - Blue - Tea - Blend - Horses
Brit -Red - Milk - Pall Mall -Birds
German - Green - Coffee - Prince - Fish
Swedish - White - Beer - Blue Master - Dogs

எனவே மீனுக்கு சொந்தக்காரர் ஜெர்மனியர்.

கேள்வியின் பின்னூட்டத்தில் இணைந்த இன்னொரு அனானிக்கும் இதே விடை வந்துள்ளது. என்றாலும் இந்த கேள்விக்கான விடையை யாராச்சும் உறுதிப்படுத்த முடியும் என்றால்... நல்லது.

ஒரு கேள்விக்கு விடைய சொல்லிட்டு அந்த பதில் சரியானதா என காத்திருப்பதும் கொடுமைதான்.... சபா ..... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday 23 March 2009

வெள்ளித்திரையில் தந்த சர்பிரைஸ் பாடல்:ராஜ்-கோட்டியும் இசைப்புயலும்!













நேற்று வெள்ளித்திரை நிகழ்ச்சி கேட்கத்தவறியவர்களுக்கான பதிவு இது! (பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் உங்களுக்காக, உங்கள் கேள்விக்கான விடையை தருவதற்காகத்தான் 26ஆம் திகதி வரை இந்தப்பக்கம் எட்டியே பார்க்கக்கூடாதென்று இருந்த என் வைராக்கியத்தை தகர்த்து எறிந்துவிட்டு இதோ இப்போது இங்கே)

நேற்று நான் தொகுத்து வழங்கிய வெள்ளித்திரையில் இசைப்புயல் சம்மந்தப்பட்ட சர்பிரைஸ் காத்திருப்பதாக 'முகப்புத்தகத்தில்' குறிப்பிட்டிருந்தேன். அது என்னவென்று அறிந்துகொள்ள... அப்பப்பா .... ஏராளமான நண்பர்கள் முயற்சி செய்தனர். ஆனாலும் சர்பிரைசை சர்பிரைசாக வைத்திருக்கும் இந்த டயானா.. நேற்றைய நிகழ்ச்சிக்குமுன் யாரிடமும் அதைப்பற்றி மூச்சே விடலையே... ஹா ஹா..

நேற்று நிகழ்ச்சி கேட்கத்தவறிய, மறந்த, முடியாமல் போன நண்பர்கள் மீண்டும் அழைப்பு மேல் அழைப்பு..... முகப்புத்தகத்தில் குறுந்தகவல்..... எல்லாம் என்னத்துக்கு ??? அந்த இசைப்புயல் பற்றிய விஷயம் என்ன என்று கேட்க..
ஸ்..சபா.....முடியல....

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்.....

இசைப்புயல், இசையமைப்பாளராக தன்னை ரோஜா திரைப்படத்தின் வாயிலாக வெளிக்காட்டும் முன்னர்.. பல இசை மேதைகளிடம் பணியாற்றியமை உங்களுக்கு தெரியும்... முதலில் இசைஞானியிடம், பின்னர் தெலுங்கு இசையமைப்பாளர்களான ராஜ்- கோட்டியிடம்.

ராஜ்- கோட்டியிடம் இசைப்புயல் 8 வருடங்கள் ஒரு கீ-போர்ட் வாசிப்பாளராக பணியாற்றினார். இப்படி அவர் பணியாற்றி வந்தபோது, 1988 இல் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'த்ரிநேத்ருடு' என்ற திரைப்படத்துக்கு ராஜ்-கோட்டி இசையமைத்தனர்.

இந்த இடத்தில்தான்... இசைப்புயலுக்கு இன்னுமொரு திருப்புமுனை...
அதாவது இந்தப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கான முழு இசை ஒருங்கிணைப்பை மற்றும் ஏற்பாட்டை இசைப்புயல் மேற்கொண்டிருந்தார்.முதன் முறையாக இசைப்புயல் ஒரு இசை ஒருங்கிணைப்பு ஏற்பாட்டாளராக பணியாற்றியது இந்தப்பாடலுக்காகத்தான்.

இந்தப்பாடலை தான் நேற்று வானலையில் தவழவிட்டிருதேன்.

இந்த பாடலை இந்திய நண்பர்கள் குறிப்பாக தெலுங்கு நண்பர்கள் நிச்சயமாக செவிமடுத்திருப்பர். என்றாலும் நம் நாட்டை பொறுத்தவரை அதற்கான வாய்ப்பு இருந்திருக்க சாத்தியமில்லை. காரணம்... மிஞ்சி மிஞ்சிப்போனால் வேற்று மொழிப்பாடல்களாக (1988 காலப்பகுதியில்) ஹிந்தி மற்றும் ஒன்றிரண்டு மலையாள, அராபிய பாடல்கள் மட்டுமே தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டிருக்கும்.


இந்தப்பாடலை இப்போது கேட்கும்போது அது ஒரு பொக்கிஷமாகத்தான் எனக்கு தோன்றுகிறது. காரணம் இசைப்புயலின் திறமையை(இசை ஒருங்கிணைப்பு ஏற்பாட்டாளராக) வெளிப்படுத்தும் ஒரு ஆரம்பக்களமாக இந்தப்பாடலும்கூட இருந்துள்ளது. இந்த அரிய பாடலை முதன் முறையாக உங்களைபோன்ற இசைப்புயல் ரசிகர்களை செவிமடுக்க வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே(பெருமையும் கூட). அப்படி செவிமடுக்கத்தவறிய நண்பர்களுக்காக அடுத்தவார வெள்ளித்திரை அந்த பாடலை மீண்டும் சுமந்துவரும்.

இந்த பாடலை எனக்கு பெற்றுத்தந்த என் நண்பன் ரோஷானுக்கும் இந்த வேளையில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்தப்பாடலை பற்றிய இன்னொரு முக்கியமான விடயம் இருக்கு.... அது அடுத்த பதிவில் தவழும்....

இவ்வளவு விஷயம் சொன்ன நீ ..... அந்த பாடல் எப்டி தொடங்குது ...என்று சொல்லலையே என யோசிக்கிற உங்க மனசு எனக்கு புரியாம இல்ல..

நிச்சயமாக அந்தப்பாடலையும் என்னுடைய அடுத்த பதிவுடன் இணைக்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday 21 March 2009

மூளைக்கு வேலை கொடுப்போர் சங்க உறுப்பினர்களுக்கு!


இந்த சில நாட்களாக தொடர் பதிவுகள் இட முடியாத நிலை. (இரசாயனபாட)பரீட்சை எனக்கு வலை விரித்திருப்பதால், இந்த வலை(ப்பூவுக்குள்)க்குள் சிக்க நேரமில்லை. என்றாலும் கூட என்னையும் நம்பி என் வலைப்பூவினை எட்டிப்பார்க்கும் என் அன்புக்குரிய, பாசத்துக்குரிய, நேசத்துக்குரிய அறிவு ஜீவிகளுக்கு, விஞ்ஞானத்தின் தந்தை தன்னுடைய மூளையை கசக்கிப் பிழிந்து உருவாக்கிய கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கும் பொறுப்பை விட்டுச்செல்கிறேன்....

நானும் பதிலை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.. என்னுடைய பதிலோடு உங்களை நான் 26ஆம் திகதி சந்திக்கிறேன்.

இப்போ நீங்க கீழே உள்ள கேள்விய சந்தியுங்க


ARE YOU IN THE TOP 2% INTELLIGENT PEOPLE IN THE WORLD?

TO FIND OUT SOLVE THE RIDDLE

THERE ARE NO TRICKS, JUST PURE LOGIC, SO GOOD LUCK AND DON’T GIVE UP!

  1. IN A STREET THERE ARE 5 HOUSES, PAINTED 5 DIFFERENT COLOURS.
  2. IN EACH HOUSE LIVES A PERSON OF DIFFERENT NATIONALITY.
  3. THESE 5 HOMEOWNERS EACH DRINK A DIFFERENT KIND OF BEVERAGE, SMOKE DIFFERENT BRAND OF CIGAR AND KEEP A DIFFERENT PET.

THE QUESTION: WHO OWNS THE FISH?

HINTS:

  1. The brit lives in a red house
  2. the swede keeps dogs as pets
  3. the dane drinks tea
  4. the green house is next to, and on the left of the white house.
  5. the owner of the green house drinks coffee
  6. the person who smokes pall mall rears birds
  7. the owner of the yellow house smokes dunhill
  8. the man living in the centre house drinks milk
  9. the Norwegian lives in the first house
  10. the man who smokes blends lives next to the 1 who keeps cats
  11. the man who keeps horses lives next to the man who smokes dunhill
  12. the man who smokes blue master drinks beer
  13. the german smokes prince
  14. the Norwegian lives next to the blue house
  15. the man who smokes blends has a neighbor who drinks water

ALBERT EINSTEIN WROTE THIS RIDDLE EARLY DURING THE 20TH CENTURY. HE SAID THAT 98% OF THE WORLD POPULATION WOULD NOT BE ABLE TO SOLVE IT.

'ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்'(பூட்டா) சொன்னத முறியடிக்க 
எத்தன
பேரு (என்னோட)கிளம்பப்போறீங்க?

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையிருந்தால் ! - DANGEROUS SHAMPOOS

A SAFETY NOTE FOR EVERYONE

Sodium Laureth Sulfate
- SLS


CLEAR
, FRUCTIS ,
Vo5
, Palmolive, Paul Mitchell, L'Oreal, Body Shop

All these Shampoos use a chemical called SLS which is actually
a floor cleaner.

They are used so as to produce more foam.

Imagine what a floor cleaner can do to you hair and scalp. It will damage the very roots of your scalp.

Check out for SLS in toothpaste too!!
Use the ones which are free from this extremely harmful chemical.


Type in 'SLS Free Shampoo' or 'SLS Free Toothpaste' in Google.Com to get a list of companies selling safe products
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday 14 March 2009

A TRUE STORY

In Phoenix , Arizona , a 26-year-old mother stared down
at her 6 year old son, who was dying of terminal leukemia.

Although her heart was filled with sadness,
she also had a strong feeling of determination.
Like any parent, she wanted her son to grow up &
fulfill all his dreams. Now that was no longer possible..

The leukemia would see to that. But she still
wanted her son's dream to come true.

She took her son' s hand and asked,
'Billy, did you ever think about what you wanted
to be once you grew up?
Did you ever dream and wish what you would
do with your life?'

Mommy, 'I always wanted to be a fireman
when I grew up..'
Mom smiled back and said, 'Let's see if we can
make your wish come true.'

Later that day she went to her local fire
department in Phoenix , Arizona , where she met
Fireman Bob, who had a heart as big as Phoenix

She explained her son's final wish and
Asked if it might be possible
to give her 6 year-old son a ride around the blo! ck on a fire engine

Fireman Bob said, 'Look, we can do
better than that. If you'll have your son ready at
seven o'clock Wednesday morning, we'll make
him an honorary Fireman for the whole day.
He can come down to the fire station, eat with us,
go out on all the fire calls, the whole nine yards!

And if you'll give us his sizes, we'll get a real fire uniform
for him, with a real fire hat - not a toy -- one-with the emblem of the Phoenix Fire Department on it, a yellow slicker like we wear and rubber boots.'

'They're all manufactured right here in Phoenix ,
so we can get them fast.

Three days later Fireman Bob picked up Billy,
dressed him in his uniform and escorted him from his hospital bed to the waiting hook and ladder truck.

Billy got to sit on the back of the truck
and help steer it back to the fire station.
He was in heaven.

There were three fire calls in Phoenix that day
and Billy got to go out on all three calls.

He rode in the different fire engines,
the Paramedic's' van,
and even the fire chief's car.

He was also videotaped for the local news program.

Having his dream come true,
with all the love and attention that was lavished upon him, so deeply touched Billy, that he lived three months longer than any doctor thought possible.

One night all of his vital signs began to
drop dramatically and the head nurse, who believed
in the hospice concept - that no one should die alone, began to call the family members to the hospital.

Then she remembered the day Billy had spent
as a Fireman, so she called the Fire Chief and
asked if it would be possible to send a fireman
in uniform to the hospital to be with Billy as he made his transition.

The chief replied, 'We can do better than that.
We'll be there in five minutes.. Will you please do me a favor?

When you hear the sirens screaming and see the
lights flashing, will you announce over the
PA system that there is not a fire?'

'It's the department coming to see one of its finest members one more time. And will you open the window to his room?'

About five minutes later a
hook and ladder truck arrived at the hospital and extended its ladder up to Billy's third floor open window------ --
16 fire-fighters climbed up the ladder into Billy's room

With his mother's permission, they hugged him and held him and told him how much they LOVED him.

With His dying breath,
Billy looked up at the fire chief and said,

'Chief, am I really a fireman now?'

'Billy, you are, and
The Head Chief, God, is holding your hand,' the chief said

With those words, Billy smiled and said,
'I know, He's Been holding my hand all day, and
The angels have been Singing..'

He closed his eyes one last time.
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

'ஜெய் -ஹோ' யூத்-விகடனுக்கு நன்றிகள் !

எழுதுவோரையும்சரி வாசிப்போரையும்சரி என்றும் இளமை துள்ளலுடன் வைத்திருக்கும் யூத்-விகடன்...என்னுடைய வலைப்பூவினையும் அங்கிகரித்திருப்பதையிட்டு ஆனந்தமே !

நியூ மீடியா எனப்படும் இணைய இதழியல் துறையின் 'ஒரு மைல் கல் இதழ்' இந்த யூத் விகடன்.
பொழுதுபோக்கிற்காக பதிவிடும் எத்தனையோ ஆர்வலர்களை அவர்களது எழுத்தாற்றலை, ஆளுமையை நாளுக்கு நாள் வளர்த்து வரும் பெருமை.. முற்றுமுழுதாக இந்த யூத் விகடனுக்கே!
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
இல் 'கோப்பிக்' காதல்

இதைப்பற்றி எனக்கு அறியத்தந்த நண்பன் ஸ்ரீராமுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிக்கிறேன். அதேவேளை என்னுடைய பதிவுகளை தமது வலைய சேவையூடாக வலம் வரச்செய்யும் nதமிழ், வலைப்பூக்கள் மற்றும் நியூஸ்பானை ஆகியவற்றுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அத்தோடு பதிவுகள் இட்ட உடனேயே தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் தன்னலமற்ற அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!

நினைத்துக்கூட பார்க்கவில்லை என்னுடைய பதிவினை யூத் விகடன் பரிந்துரைக்கும் என்று! இந்த வலைப்பூவினை மலரவைத்து ஐந்தே ஐந்து மாதங்கள் ஆன நிலையில் இது சாத்தியமாகி இருக்கிறது.

(சந்தோசம் துளிர்விட நான் சொல்லவதெல்லாம்)
யூத் விகடனுக்கு 'ஜெய்- ஹோ' - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Tuesday 10 March 2009

கொடிது கொடிது கோபம் கொடிது ! - ANGER

A STORY TO CONTROL ANGER....

எங்களில் சிலர் தொட்டதொன்னூருக்கும் கோபப்படும் சந்தர்ப்பங்கள் உள. சிலர்(எப்பவாவது) ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை கோபம் கொள்வதும் உண்டு.சிலருக்கு எது நடந்தாலும் கோபமே வராது. மேற்கூறியதில், நீங்கள் எப்படிபட்டவராயிருந்தாலும்..இந்தக்கதை உங்கள் வாழ்க்கையில், எதோ ஒரு விதத்தில் எதோ ஒருசந்தர்ப்பத்தில் நீங்கள் கோபப்படும்போது நினைத்து பார்க்க வைக்கும் என்ற எண்ணத்தில் என் வலைப்பூவில் தன் இதழ் விரித்துப்பதிவாகிறது....

எந்த நேரமும் எதற்கெடுத்தாலும்கோபப்படும் ஒரு பையன் இருந்தான்.
There once was a little boy who had a bad temper.


இதைக்கண்ட அவனுடைய தந்தை அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளை கொடுத்து, கோபம் வரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்த ஆணிகளை ஒவ்வொன்றாக மதிற்சுவரில் அறையச்சொன்னார்.
His Father gave him a bag of nails
and told him that every time he lost his
temper, he must hammer a nail into the back
of the fence.

முதல்நாள் அவன் 37 ஆணிகளை மதிற்சுவரில் அறைந்திருந்தான். அதன் பின்னர் படிப்படியாக அறையப்பட்ட ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டு போனது, அவனுடைய கோபம் குறைந்ததை போல..!ஒரு சில வாரங்களில் தனது கோபத்தை நன்கு கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டான்.(ஒருகட்டத்தில் ஆணிகளை சுவரில் அறைவதைக்காட்டிலும், தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது அவனுக்கு லேசாகிப்போனது)

The first day the boy had

driven 37 nails into the fence. Over the next
few weeks, as he learned to control his



anger, the number of nails hammered daily
gradually dwindled down. He discovered

it was easier to hold his temper than to
drive those nails
into the fence.


ஒருநாள் முற்று முழுதாக 'கோபம் என்றால் என்ன'? என்ற அளவுக்கு மிகவும் பக்குவப்பட்டிருந்தான். இதை தன் தந்தைக்கும் தெரியப்படுத்தினான். இதைக்கேட்ட தந்தை இனி கோபத்தைக்கட்டுப்படுத்தும் போதெல்லாம், இதுவரை அறைந்த ஆணிகளை மீளப்பிடுங்கச்சொன்னார்.
Finally the ! day came when the boy didn't lose his temper at all. He told his father about it and the father suggested that the boy now pull out one nail for each day that he was able to hold his temper.


ஒருவாறு, அறையப்பட்ட ஆணிகளை எல்லாம் தந்தையின் ஆலோசனைப்படி பிடுங்கி முடிந்தபின், அதையும் தந்தையிடம் கூறினான். அவனைப்பார்த்து புன்னகைத்த தந்தை அவனை அந்த மதிற்சுவர் அருகில் அழைத்துச்சென்றார். "நான் சொன்னது போலவே நடந்து கொண்டாய் மகனே... ஆனால் பார் இந்த ஓட்டைகளை...! ஆணிகள் (அறையப்பட்டு) இப்போது பிடுங்கப்பட்டிருந்தாலும்கூட இனி இந்த மதிற்சுவர் மீண்டும் பழைய நிலையை அடைய முடியாது. இதைப்போலத்தான் நீ கோபத்தின் போது சொல்லும் கடுஞ்சொற்களும் ஆறாத்தழும்புகளை மனதில் விட்டுச்செல்லும். அவற்றை நீக்கவோ மறக்கவோ முடியாது.

The days passed and the young boy was finally
able to tell his father that all the nails
were gone. The father took and led him to the fence He said, "You have done well, my son, but look at the holes in the fence. The fence will never be
the same. When you say things in anger,
they leave a scar just like this one.


கதை கூறும் படிப்பினை :

நீங்கள் எத்தனை முறை மன்னிப்பு கேட்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. (கோபப்பட்ட தருணங்களில்) எத்தனை தடவை இன்னொருவரை நோகடிக்கும் வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்

"தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு "


THE MOTIVE OF THE STORY

It won't matter how many times you say "I'm sorry", the wound is still there. A verbal wound is bad than a physical one.

இப்போதெல்லாம் நானும்கூட கோபப்படும் தருணங்களில் இந்த கதையை நினைத்துப்பார்க்கிறேன்... நீங்கள் எப்படி ?

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday 5 March 2009

'கோப்பி'க்காதல்

என் விழிகளையும் இதயத்தையும் கனக்க வைத்த ஒரு காதல் கதை இது!

ஒரு களியாட்ட நிகழ்வில் தான் முதன் முதலாக அவன் அவளை காண நேர்ந்தது...
அவளுடைய துடுக்குத்தனமும் பண்பும் ஏன் அழகும் கூட, அவனை மட்டும் அல்ல அங்கு வந்திருந்த பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஆர்ப்பாட்டமில்லாத நம்ம ஹீரோ(அதாங்க இந்த கதையின் நாயகன்) எப்படியும் அவளோடு கதைத்து விட வேண்டும் என எண்ணித் துணிந்து, நிகழ்ச்சி முடியும் தருவாயில் அவன் அவளை அணுகி....
" என்னோடு ஒரு கப் காபி சாப்பிடுவீங்களா?" என்று கேட்க, அவளும் சற்று திகைத்தாலும் தன்னை சுதாகரித்து கொண்டு, சம்மதம் தர, அடுத்த நொடி இருவரும் மயான அமைதியை வலுக்கட்டாயமாக வரவழைத்து , காபி மேசையில் அமர்ந்தபடி......

எதோ ஒரு எண்ணத்தில், ஒரு வரட்டு தைரியத்தில், அவளை அழைத்துக்கொண்டு வந்திருந்தாலும், அந்த நேரத்தில் அவனால் தன்னிலையை வெளிப்படுத்த முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தபோது..... அவளாலும் அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் " நான் போகவா" என கேட்க...
சற்றும் எதிர்பாராமல் அந்த ஹோட்டல் வேய்டரிடம், "எனக்கு கொஞ்சம் உப்பு கொண்டு வந்து தாங்க... என்னுடைய இந்த கோபியில் கலந்து அருந்த" என்று சொல்ல, அங்கிருந்த அத்தனை பேரின் கேலிப்பார்வைக்கும் உள்ளானான் அவன்!

எல்லோரும் அவனை ஒரு விதமாய்ப்பார்க்க அவனும் ஒருமாதிரி தன்னை சுதாகரித்துக்கொண்டு அவளை பார்த்து புன்னகைத்தான். அவனுடைய இந்த செயலால் திகைத்துப்போன அவள் ஆர்வத்தோடு அதற்கான காரணம் கேட்க,

"என்னுடைய சிறுபிராயத்தில் எனது வீடு கடலுக்கு பக்கத்தில் அமைத்திருந்தது. கடல் தந்த அமைதி, அதில் நான் விளையாடிய பொழுதுகள், கடற்கரையில் அம்மா, அப்பாவுடன் கை கோர்த்து பதித்த தடங்கள்.. இவையெல்லாம் இன்னும் கூட என்னால் மறக்க முடியாதவை ..
கடல் காற்றின் உப்புச்சுவை கூட என் ரத்தத்தில் கலந்து... ஹும்... அது சொன்னால் புரியாது.... அந்த நினைவுகளை மறக்க முடியாமல்தான்.. தினமும் நான் அருந்தும் கோபியில் உப்பை கலக்கிறேன்.... நினைவுகளையும் சேர்த்தே சுவைப்பதற்காக....

அந்த இடத்தில் நான் இப்போது இல்லையே என்கிற கவலையை, என்னுடைய பெற்றோரை விட்டு பிரிந்த துன்பத்தை..... இந்த உப்பு கலந்த பானம் தான் துடைத்துக்கொண்டிருக்கிறது...."

என்றான்..... விழிகளில் கண்ணீர் துளிர்விட....

அவனுடைய இந்தப்பதில் அப்படியே அவள் உள்ளத்தில் ஆழப்பதிய, அவனை பார்த்து பரவசமும் பெருமையும் அவள் விழிகளில் பொங்கி வழிந்தன.. இப்படி
தன் சொந்த மண்ணை, இடத்தை, பெற்றோரை தூர இருந்து நேசிக்கும் அவனுடைய குணம் அவளுக்கும் பிடித்துப்போக... தன்னுடைய மன உணர்வுகளை, அவளை பற்றிய விடயங்களை அவனோடு அவளும் பகிர்ந்து கொண்டாள்...

நாளுக்கு நாள் மெல்ல மெல்ல ... (இதுக்கு மேலயும் நான் சொல்ல வேணுமா)
நடப்பன எல்லாம் இனிதே நடந்து முடிந்தன...

ஆனால் அப்படிப்பட்ட பேரன்பனான அவனை, தன் மீது உயிராய் இருந்த, கருணையின் வடிவமாய் அவள் வாழ்க்கையில் வலம் வந்த, தனக்காகவே வாழ்ந்தவனை... காலத்தின் கொடுமையால் பிரிய வேண்டிய நிலை அவளுக்கு...

கன்ட்ரோல் ... கன்ட்ரோல் ....

அவனுடன் தான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியையும் இப்போது அவள் மீட்டிப்பார்த்துகொண்டிருக்கிறாள்......

அவனை கரம் பிடித்த நாள் முதல்... அவனுக்கு பிடிக்குமே என்று ... அவன் விரும்பும் உப்பு காபி தான்.....தினமும்...

அவர்களுடைய வாழ்க்கை, உலகத்தில் யாருமே வாழ்ந்திராத ஒரு வசந்த வாழ்க்கையாக தான் இருந்தது... அவன் அவளை விட்டுப்பிரியும்வரை....(வண்ணமயமான 40 வருடங்கள்)

உலகைவிட்டு பிரியும்போது அவன் இறுதியாக அவளுக்காக எழுதிய கடிதம் இதுதான்...

என் பிரியமானவளே,

என்னை மன்னிப்பாயா ?

உன்னுடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் உனக்கு நான் உண்மையானவனாகவே இருந்துள்ளேன்...
ஆனால் ஒரு பொய்... ஒரே ஒரு பொய்யுடன் .... என் வாழ்நாள் முழுக்க உன்னுடன் கழித்திருக்கிறேன் ... அதற்காக என்னை மன்னிப்பாயா ?

அந்தப்பொய் ...

உன்னை முதன் முதலாக நான் சந்தித்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கா ? நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உன்னுடன் எப்படி கதைக்க ஆரம்பிப்பது என என்னையே நான் 1000 கேள்வி கேட்டு, தடுமாறிக்கொண்டிருந்தபோது.....

உனக்கு தெரியுமா... உண்மையிலேயே என்னுடைய கோபியில் நான் கலப்பதற்காக கேட்க இருந்தது சீனியையே... ஆனா அதை வாய்தவறி 'உப்பு' என்றுவிட்டேன். நான் இருந்த நிலையில் மீண்டும் சரியாக 'சீனி' என்று கேட்க மனமும் இடந்தரவில்லை...
ஆனால் அந்த சம்பவமே எமது காதலின் ஆரம்பத்துக்கு வழிகோலும் என நான் கனவிலும் கூட நினைக்கவில்லை

அதன் பின் எத்தனையோ தடவைகள் உன்னிடம் இதைப்பற்றி சொல்ல வந்து, பின் பயந்து பின்வாங்கியதுமுண்டு....

இப்போது நான் இறக்கும் இந்த தருவாயில் பயப்பட வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன் ... அதனால் உண்மையை மொழியவும் துணிந்தேன்.... உன்னிடம்தான் எதையும் மறைத்து எனக்கு பழக்கமில்லையே...

உண்மையிலேயே எனக்கு உப்பு காபி பிடிக்காது.. அந்த சுவை... அப்பப்பா..... கொடுமை
ஆனால் உன்னுடன் வாழ்ந்த என் வாழ்நாள் முழுதும் அதைத்தான் நான் சுவைத்திருக்கிறேன்.... எனென்றால் உன்னுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான நாட்களை விட எனக்கு வேறொன்றும் பெரிதல்ல....

உனக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்.....
இனியும் இன்னொரு பிறவி இருக்குமென்றால், அந்தப்பிறவியிலும் நீ என்னுடன் இருப்பாயானால்... மீண்டும் அந்த உப்பு காபியை குடித்துக்கொண்டே வாழ சம்மதம்...

இப்படிக்கு,
என்றும் உன்னுடனேயே வாழத்துடிப்பவன்


வாசித்து முடித்தபோது அந்த மடல் முற்று முழுதாக அவளுடைய கண்ணீரால் நனைந்து போயிருந்தது.....
(என்னுடைய இதயமும் தான்.... அட இப்ப உங்க இதயமும் கூட)

இன்னொரு பொழுது அவளிடம் யாரோ கேட்டார்கள்....
'உப்பு காபி எப்படியிருக்கும்'?

அவளுடைய பதில் -
"அது வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு இனிப்பானது" - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf