வந்தியத்தேவன் அண்ணா அறைகூவல் விடுத்திருந்த தொடர் பதிவுத் தலைப்புகளில் மூன்றாவது இன்று களம் காணப்போகிறது...
அழகு
உண்மையில் அழகானவை என்று சொல்லப்படுபவை கண்களால் பார்க்கப்படுபவை அல்ல:அவை மனத்தால் மட்டுமே உணரப்படக்கூடியவை.
இதை இன்னும் தெளிவா சொல்வதென்றால்,
The best and most beautiful things in the world cannot be seen, nor touched ...
but are felt in the heart.
-- Helen Keller
ஆழமா கொஞ்சம் யோசிச்சா இதன் அர்த்தம் புரியும்.
இந்த உலகில் சில உண்மைகள், சில உறவுகள், சில உணர்வுகள் வரையறுக்க முடியாத பெறுமதியோடு... உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்ல....
என்னைப்பொறுத்தவரை மேலே நான் குறிப்பிட்டது போல
அன்பு
கருணை
நம்பிக்கை
இந்த மூன்றையும் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதன் நிலை மாறாது. இந்த ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகினை மனதுக்குள் தூவுகின்றன.

உறவுகளுடனான பந்தத்தை உறுதிப்படுத்துவது
-அன்பு
பிற உயிர்களுடன் உயிர்ப்பாய் இருக்கச்செய்வது
-கருணை
இறைவன் என்ற விடைகாணமுடியாத கேள்விக்கு பதிலாய் அமைவது
-நம்பிக்கை

(உங்களுக்குள் உங்களைத்தேடி விடை காண வைப்பது
தன்னம்பிக்கை)
இந்த மூன்றும் யாரிடம் வற்றாத ஊற்றாக இருக்கின்றதோ அந்த மனிதன்தான் இம்மையிலும் மறுமையிலும் உண்மையிலேயே பேரழகன்.
அன்பென்ற மழையில் அகிலங்கள் நனையட்டும்
கருணைக்கடலில் உலக உயிர்கள் கலக்கட்டும்
இறைவன் என்ற முடிவிலியில் பேரானந்தம் நிலைக்கட்டும்
இப்போது எது அழகு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்
அடுத்து தொடர்பதிவின் இறுதித்தலைப்பு ''பணம்'' - எப்ப வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது .. எனக்கு பதிவிட நேரம் கிடைக்கும் போது வரும்....
வரட்டா .....!













