Friday 17 June 2011

ஃபுகுஷிமா முயலுக்கு வைத்த ஆப்பு ! (Fukushima Mutant Rabbit)

இந்த உலகில் ஆக்கங்கள் ஒரு பக்கம் தன் முகம் காட்டிகொண்டிருக்க
அழிவுகள் தன் மறுமுகத்தை காட்டிக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் அதாவது கடந்த மார்ச் மாதமளவில் ஜப்பானில் ஏற்பட்ட FUKUSHIMA அணு மின்நிலையத்தின் மூன்றாவது அணு உலை வெடித்ததன் காரணமாக வெளியான அணுக்கதிர் வீச்சு தற்போது இருமடங்கான நிலையில் செவிகள் அற்ற நிலையில் ஒரு முயல்குட்டி பிறந்துள்ளது, அதுவும் FUKUSHIMA உலையிலிருந்து 18 மைல் தூரத்தில்.

அந்த முயல் குட்டியை நீங்களும் பாருங்க

அணுக்கதிர் வீச்சு முயலின் மரபணுவில் தீடீர் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளமையே (மரபணு விகாரம்) இதற்கு காரணம் என விஞ்ஞானிகளால் அஞ்சப்படுகிறது.

மரபணு விகாரம் காலா காலமாக இடம் பெற்று வருவது ஒன்றும் புதிதல்ல ஆனால் இப்போ உலகம் போற போக்கை பார்த்தல், அதில் இடம் பெரும் எதிர்பாராத நிகழ்வுகளினால் மாதக் கணக்கிலேயே அதன் விளைவுகளை நாம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது.


ஆனா இதை என்னவென்று சொல்வது ?

Fukushima mutant rabbit: "An earless bunny has been discovered just outside the radiation zone of the Fukushima nuclear plant in Japan."


நாயகன் பாணியில் ஒரு கேள்வி /பதில்

இது நல்லதுக்கா கேட்டதுக்கா...? தெரியலேயேப்பா..........


(POST A COMMENT ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன)

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday 16 June 2011

ரியல் எந்திரன் (Real Enthiran)


விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சி எந்தளவுதூரம் இந்த உலகை வளைத்துப் போட்டிருக்கிறது என்பதை கீழுள்ள காணொளியை கண்ணுற்றால் புரியும் .

மனிதவர்க்கம் புகுத்தநினைக்கும் மனிதனைபோன்ற ரோபோ உலகின் அதிநவீன கண்டுபிடிப்பும் உருவாக்கமுமாக 3 Geminoids/Anroids அவற்றின் உரிமையாளர்களோடு Roboticist Prof.Hiroshi Ishiguro(Osaka University), அவரின் பெண் உதவியாளர், Prof. Henrik Scharfe(AALBORG University) ருப்பதை படத்தில் காணலாம்

இவற்றைக் கண்ணுற்றபோது இயக்குனர் சங்கர் எந்தளவுதூரம் எதிர்காலக்கணிப்பை நிகழ்கால ஆராய்ச்சிகளில்
இருந்து மதித்து தன்னுடைய எந்திரன் படத்தின் மூலமாக தந்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்க்கையில் உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது.

மொத்ததில இந்தப்பதிவிலிருந்து நான் என்ன சொல்ல வாறன் எண்டா

ஒரு காலம் வரும்
ரோபோக்கள் இவ்வுலகை ஆட்சி புரியும்
ஆனால் அதைப்பார்க்க நானோ நீங்களோ இருக்க மாட்டோம்...
Ha ha ha..
இது எப்படி இருக்கு?

அட இவர் யார் எண்டு பார்க்கிறீங்களா... இவர்தான் நம்மட ShakthiFM தந்திரன்
DOT.............................................................................................


(உங்கள் பின்னூட்டங்களை கீழேயுள்ள Post a Comment பொத்தானை அமுக்கி பதிவுசெய்யுங்கள் )

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf