Saturday 20 November 2010
இன்று எனக்கு உயர்வு தந்த சக்தி பண்பலை எனும் என் தாய்க்கு 12 ஆவது பிறந்ததினம்.......
Saturday 19 June 2010
பலமும் பலவீனமும் பிரமிப்பும் ராவண்
Thursday 6 May 2010
விட்டகுறை தொட்டகுறை 'திரு திரு துரு துரு'
Sunday 14 February 2010
''துறு துறு திரு திரு''வுக்கிடையில் காதல் கொஞ்சம் அதை கவிதை மிஞ்சும்
படித்து ரசித்ததால் பகிர்வதற்கு மனம் துடிக்கிறது ....
புவிஈர்ப்பினால் புவியில் விழுந்து காயப்பட்டுப் போகிறது ஆப்பிள்...
நல்லவேளை காதலின் ஈர்ப்பினால் தடுக்கிவிழும் போதெல்லாம்
என்மீதே விழுகிறாய்
காயமே இல்லாமல் !
நன்றி "கொஞ்சும் கவிதைகள் " (சப்ராஸ் அபூபக்கர் சொன்னது)
( நான் சொல்லும் நன்றி சப்ராஸ் அபூபக்கருக்கு முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்கு)
இதான்.... அந்தக்காலத்துல ஏவாளும், ஆதாமும் கடிச்சிட்டு மிச்சம் வச்ச ஆப்பிள்..
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf
Wednesday 10 February 2010
துறு துறு டயானா... திரு திரு முழியுடன்!
சோதனைசெய்த மாணவத்தலைவி ''I have found it '' என்று சொல்ல....
''கண்டுபிடிச்சிட்டாய்யா கண்டுபிடிச்சிட்டாய்யா'' இப்படி மனசு வடிவேல் sytle இல் படபடக்க....
Tuesday 9 February 2010
'மிஸ்'ஆக விடுவோமா ??
கடந்த ஆண்டில் என் கவனத்துக்கு புலப்பட்டும்கூட, மேற்கொண்டு எதிர்ப்பதிவிட முடியாமல் போனவற்றுக்கான பதிவாக இப்பதிவு....
1 )
பதிவுக்கு சொந்தக்காரர் சகோதரன் சதீசன் சத்தியமூர்த்திக்கு முதற்கண் என்னுடைய நன்றிகள்...அவர் என் வலைப்பதிவுக்காக அன்போடு தந்த 'SCRUMPTIOUS BLOG AWARD 'காக.
வெளிப்படையாக சொல்லப்போனால் நான் அடிக்கடி பதிவுகள் இடுவது கிடையாது.. எழுத 1000 - 1000 ஆசைகளும், யோசனைகளும் இருந்தாலும் பதிவிடுவதற்கான நேரம் அவ்வளவாக கிடைப்பதில்லை...((
நேரம் கிடைக்கும்போது நண்பர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பும் தொடுப்புகளை வைத்து அவர்களின் பதிவுகளை வாசித்து பின்னூட்டமிடுவதோடு சரி... அதுவும் இப்போது குறைந்து வருகிறது....(((
சதீஷன் தம்பி நல்ல ஒரு படைப்பாளி....எந்த நேரமும் ஒருவித ஆர்வத்துடனேயே திரிந்து கொண்டிருப்பவர்....வெற்றி பண்பலையில் அவருடைய நிகழ்ச்சிகளை செவிமடுத்திருக்கிறேனேயொழிய தனிப்பட்ட முறையில் எனக்கு அவரைத் தெரியாது
அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது இந்தப்பதிவுலகம்தான்...
முதன் முதலாக நான் வாசித்த அவருடைய பதிவு கந்தசாமி - திரைப்படம் பற்றியது..
அந்தப்படம் வந்த ஆரம்பத்தில்... தாறுமாறாக விமர்சனங்கள் விதைக்கப்பட்டபோது.... இவருடைய விமர்சிக்கும் சிந்தனை சற்று வித்தியாசமாகவே இருந்தது.. இதுவே என்னை இவருடைய பதிவுகளை வாசிக்கத்தூண்டியது.. அத்தோடு அவருடைய பதிவுப்பக்க தலைப்புகள் சரவெடியாகவே இருக்கும்.. அவை வாசிக்கத்தூண்டும்..
இப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து 'SCRUMPTIOUS BLOG AWARD' பெற்றுக்கொண்டது மகிழ்ச்சியே...
2) http://enularalkal.blogspot.com/2009/12/2009-1.html அடிக்கடி என் வலைப்பதிவை எட்டிப்பார்த்து.. குறைநிறைகளை சுட்டிக்காட்டி என்னை ஊக்குவிக்கும் அன்புப்பதிவர் 'வந்தி' அண்ணா, தான் 2009 இல் ரசித்த பதிவுகள் பற்றிய ஒரு தொகுப்பைத் தந்திருந்தார் ..அதில் என்னுடைய ''அவதார்'' திரைப்படம் பற்றிய பதிவு அவரைக்கவர்ந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.. நன்றி !
பலரின் பதிவுகளை தேடித்தேடி வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் சுடச்சுட பதிவுகள் தந்து அசத்துபவரும் கூட... தன் வேலைகளுக்கு மத்தியில் எப்படி பதிவுகள் பலவற்றை வாசிக்கிறார்- 'பின்'னூட்டமிடுகிறார் என்று... நான் அவரைப்பார்த்து வியந்ததுண்டு... தொடரட்டும் அவர் சேவை....
3)
http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_19.html எனது பள்ளி-வாழ்க்கை குறும்புத்தனங்கள், நண்பர்கள் பற்றிய பதிவை வேண்டி நின்ற கரவைக்குரல் - பாவம் என் பதிவுக்காக காத்திருந்து காத்திருந்தே அவர் குரல் கரைந்திருக்கும்.. இன்றுவரை அவருடைய மூச்சுப்பேச்சையே காணவில்லை... தாங்கள் எங்கே உள்ளீர்கள் ?? கொஞ்சம் வந்து விட்டுப்போங்கோஅடுத்து அரங்கேறப்போவது உங்கள் பதிவுதானுங்கோ..!
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpufSunday 10 January 2010
விண்ணை தாண்டுமா???? VTV பாடல்கள்
என்னைப்போல சில இசைப்புயல் வெறியர்கள் இதே உணர்வுடன் இருப்பது போல்
பலர் அனைத்து பாடல்களும் நன்றே என்று சொல்லவும் செய்கிறார்கள்..
எனினும் பாடல்கள் பற்றிய ரசனை அவரவர் உள்ளச்செவியை பொறுத்தது... அது மட்டுமல்லாமல் முகம்கொடுக்கும் EXPOSTURE யும் பொறுத்தது.
VTV பாடல்கள் பற்றிய என்னுடைய உணர்வு இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் ....இசைப்புயல் ஹிந்தி திரையிசைக்குள் ஆதிக்கம் செலுத்த முழுமையாக நுழைந்த பின் அந்தப்பாடல்களை கேட்டு பழகியதால் எனக்கொள்ளலாமா ??
ஆம் இப்ப அப்படித்தான் என்னை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்...
இதுவரை கேட்டதில் ஹோசனா பாடலும், ஓமனப்பெண்ணே பாடலும் என்னுடைய தெரிவாக அமைகின்றன..
ஹோசனா பாடலின் ''ஹெல்லோ... ஹலோ'' என வரும் BLAZEE யின் கணணிமயப்படுத்தப்பட்ட குரல் பிடித்திருப்பதால்... இப்போது என் RINGTONE கூட அதுவாகிப்போனது...
என்ன செய்ய எல்லாம் A .R .R இன் மாயம்!
Sunday 3 January 2010
''PAA'' ('பா'சம் - 'பா'ர்வைகள் - 'பா'டம்)
''PAA''- நிச்சயமாக இது ஹிந்தித் திரைப்பட விமர்சனம் அல்ல
ஒரு ரயில் தன் பயணத்தை ஆரம்பிக்கும் தருணம் ,
ஒரு வயதானவரும், 25 வயது பூர்த்தியான அவருடைய மகனும்..
எதிர்ப்பக்க இருக்கைகளில் ஒரு இளம் ஜோடி...இவர்களை கவனித்த வண்ணம்..
ரயில் தன் பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு கணமும் அந்த இளைஞனின் கண்களிலும் உள்ளத்திலும் அவ்வளவு குதூகலம்!
யன்னல் பக்கத்தில் அமர்ந்து கொண்ட அவன் தன் கரத்தை வெளியே நீட்டி தழுவிச்செல்லும் காற்றை அனுபவித்தான். பின் மரங்களைக் காட்டி "அப்பா பாருங்கோ மரமெல்லாம் பின்னோக்கி அசையுது" என்றான்.
வயதானவரும் புன்னகைத்தவாறே தன் மகனின் வியப்புகளுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தார்.
எதிர்ப்பக்கத்தில் இருந்த ஜோடிக்கு ஒரே குழப்பம்... என்னடா 25 வயதுப் பொடியன் சின்னப்பிள்ளை போல நடந்து கொள்கிறானே என்று...
குழப்பமும் வியப்பும் ஒருங்கே சேர அவனை தொடர்ந்தும் கவனித்துக்கொண்டு இருந்தது அந்த ஜோடி..
சிறிது நேரத்தில் '' அப்பா பாருங்கோ குளத்தில பறவை நீந்துது என்றான்'' மகிழ்ச்சி பொங்க....
அந்த நேரத்தில் மழை வரவே மழைத்துளிகள் அவன் கைகளில் பட, தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அப்பா இப்போது மழைத்துளிகள் என்னைத் தொடுகின்றன என்று ஆனந்தத்தில் துள்ளினான்...
இதுக்குமேலும் பார்க்க சகிக்காமல், அந்த ஜோடி பெரியவரிடம் பேச்சு கொடுத்தது..
உங்கள் மகனை நீங்கள் நல்ல ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து ஏன் வைத்தியம் பார்க்கக்கூடாது ? என்று கேட்டது...
''ஓம் நாங்கள் இண்டைக்கு தான் ஆஸ்பத்திரியில் இருந்து வாறம்... என்ட மகனுக்கு இன்று தான் அவனுடைய வாழ்க்கையில் முதன் முதலாக தன் இரு கண்களாலும் உலகத்தைக்காணும் பாக்கியம் கிடைத்திருக்கின்றது'' என்றார்...அந்தப்பெரியவர்