Saturday 20 November 2010

இன்று எனக்கு உயர்வு தந்த சக்தி பண்பலை எனும் என் தாய்க்கு 12 ஆவது பிறந்ததினம்.......

ஒரு வாரமாக உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் மனம் திறந்து சில வார்த்தைகள்.............

இந்த இனிய நாளில் .......நீண்ட இடைவேளைக்குப்பின் எனது எழுத்துக்கள் பதிவுலகை முத்தமிடுகின்றன..

இன்று சக்தி தன் 12 ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு இருக்கும் இத்தருணம்.... எனக்கு சக்தியோடு இணைந்து கொண்டு பூர்த்தி செய்கின்ற 5 ஆண்டுகளும் 8 மாதங்களும் என்று சொல்லிக் கொள்ளலாம்..

சக்தியில் நானும் ஒரு அறிவிப்பாளராக வேண்டும் என்ற ஆசையின் உந்தலில் இணைந்து கொள்ள முற்பட்ட வேளையில் என்னிடமிருந்த 3 மூலதனங்கள்
1) நம்பிக்கை
2) கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
3) ஜனரஞ்சகமாக பிறர் ரசிக்கும்படி வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டும் என்ற ஒரு தீ .............

சக்தியின் ரசிகையாக இருந்தபோதே இவற்றை என்னிடம் இனம் கண்டு, எனக்கு உற்சாகம் தந்து ஊக்கப்படுத்தி சக்திக் குடும்பத்தோடு இணைய எனக்கு வாய்ப்பளித்த சிரேஷ்ட அறிவிப்பாளர், முன்னாள் சக்திப் பணிப்பாளர், (என்னுடைய கோட் பாதர் என்று சொன்னால் கூட தப்பில்லை)
திரு. R .P . அபர்ணாசுதன் அவர்களுக்கும்....

இப்போது நான் அடைந்துள்ள வளர்ச்சிக்கும் (பகுதி நேர அறிவிப்பாளர், அறிவிப்பாளர், வார இறுதி நாட்களுக்கான பிரதி முகாமையாளர்) , இந்தப் படிப்படியான வளர்ச்சிக்கு காரண கர்த்தாக்களாக இருந்த, இருந்து கொண்டிருக்கிற சிரேஷ்ட அறிவிப்பாளர்கள்
ஜீவா அக்கா, மயூரன் அண்ணா, கணா அண்ணா, கஜமுகன் அண்ணா, ஷெல்டன் அண்ணா, சுமன் அண்ணா, ரவுப் அண்ணா, குணா அண்ணா, உமா அக்கா, சத்ய சன்னிதா அக்கா ஆகியோருக்கும்

இப்போது எம்மை வழி நடாத்திக் கொண்டிருக்கும் சக்தி நிலையைப்பொறுப்பதிகாரி திரு.காண்டீபன் அண்ணா அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் அதே தருணம்.... 2005 இல் டிசெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை 'தபால் விருப்பம்' என்னுடைய முதல் நிகழ்ச்சி.... அந்த நிகழ்ச்சிக்காக வானலையில் நடை பயிற்றுவித்து நிகழ்ச்சியை என்னுடன் தொகுத்து வழங்கியவர் காண்டீபன் அண்ணா என்பதையும் நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

சக்தியோடு இணைந்து கொண்ட ஞாபக மீட்டல்கள் பல உள்ளன என்றாலும் இப்போதைக்கு இவை போதும் என்ற எண்ணத்தோடு ...

சக்தி கொடுத்ததும் பல
சாதனைகளாய் படைத்ததும் பல
அது இனியும் தொடரும் ...............

சக்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


சக்திக் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் 2005 - கடல் கடந்த தேசம் நாடகத்தில் பங்கேற்றபோது
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday 19 June 2010

பலமும் பலவீனமும் பிரமிப்பும் ராவண்




(இந்தப் பதிவு - கண்டிப்பாக பார்த்தவர்களுக்கு மட்டும்)

1) இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படத்திலும் காட்டப்படாத அளவுக்கு காட்டின் அழகு கண்களை நிறைக்கிறது. அழகானவற்றை பிரமிக்க வைக்கும் அளவுக்கு தன் ஒளிப்பதிவின் மூலம் காட்டுவது சந்தோஷ் சிவனுக்கு கை வந்த கலை. அதை இங்கும் நிரூபித்திருக்கிறார். மலை, மழை, மரங்கள், நீர், ஏன் ஐஸ்வர்யா ராய் கூட அழகின் செழுமையில் ஒருபடி மேல்தான் இந்தப் படத்தில்.
திரையரங்கின் A/C குளிரையும் தாண்டி ஒளிப்பதிவு கண்களைக் குளுமைப்படுத்தியது எனலாம்.
(மணிகண்டனுக்கும் இதில் பங்குண்டு)



ஸ்ரீகர் பிரசாதின் எடிட்டிங்க்கும் கிரெடிட் கொடுக்கலாம். பெயரோடத்தின்போது கிராபிக்ஸ் வியக்கவைக்கிறது

2 ) சொல்லிக்கொள்ளும் படியாக வீர தீர சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும் நிறைவுக்கட்டத்தில் தொங்குபாலச் சண்டை... ஆஹா.... கமெராவின் கோணத்தில் மெய் சிலிர்க்கவைத்தது.

3) எனக்கு ஐசுவை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும் இந்தப்படத்தைப் பொறுத்தவரை ஐசுவின் கதாபாத்திரம் மட்டுமே மனதை நிறைக்கிறது...திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் கூட.



4) இசைப்புயலின் BGM மிரட்டுகிறது காட்சிகளுக்குத் தக்கவாறு... என்றாலும் இந்தப்படத்தை பொறுத்தவரை காட்சிகளுக்கிடையில் பாடல்களுக்கான செருகல்கள் அர்த்தமற்று இருக்கின்றன.


5) ராவண் கதாபாத்திரத்தை இன்னும் பலமானதாகக் காட்டியிருக்கலாம்
(இது எனது உள் மனதின் ஏக்கம்... ரொம்ப எதிர்பார்தேன்பா)


6) நவீன ராமாயணம் + அதன் திருப்பங்கள் - இயக்குநர் சிகரம்
மணிரத்தினத்துக்கு மட்டுமே உரிய சிறப்பு

7) மணிரத்தினத்தின் திரைப்படங்களுக்குரிய இன்னுமொரு சிறப்பு - வசனங்கள். ஆனால் இந்தப்படத்தைப் பொறுத்தவரை அவ்வளவு உயிர்ப்பான வசனங்கள் இல்லை. சாதாரணமாக பேசப்பட்ட வசனங்கள்
மனதை எள்ளளவேனும் ஏதும் செய்யவுமில்லை.(மணி அங்கிள் அதை கொஞ்சம் கவனித்திருக்கலாம்)

8) கிளைமாக்ஸ் காட்சிக்கு இன்னும் கொஞ்சம் திருப்புமுனை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்(த்ரில் அதிகரித்திருக்கும்).. ஏனென்றால் எதிர்பார்த்தது தான் கிளைமாக்ஸ் ஆனது. எனவே எனக்கு த்ரில் இல்லாமல் போனது :((
(உங்களுக்கு எப்படியோ தெரியாது)


9) விக்ரமும், ப்ரியாமணியும் தாங்களே ஹிந்தி dub: குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

10) சில பிரம்மிப்பூட்டும் இடங்களை இந்தப்படத்துக்காகவே தேடித் தேடி ஒளிப்பதிவு செய்திருக்காங்க




விஷ்ணு பகவானின் இரண்டாகப் பிளந்திருந்த சயன சிலை Locationஐ எப்படித் தேடிப்பிடித்தார்களோ தெரியல.
(அந்த இடத்துக்கு நேரே சென்று பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை .. படம் பார்த்தபோது)

11) பிரதான நடிகர்கள் இந்தப்படத்துக்காக எடுத்திருக்கும் ரிஸ்க்குகள் படம் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கச்செய்கிறது.

12) ஹனுமான் பாத்திரத்தை பிரதிபலிக்கும் கோவிந்தாவின் பாத்திரத்தை(தமிழில் கார்த்திக்) மதுப்புட்டியோடு மணி அங்கிள் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல்

குறைகளும் நிறைகளும் இருந்தாலும்
நம்பிப் பார்க்கலாம் இந்த நவீன ராமாயணத்தை..
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday 6 May 2010

விட்டகுறை தொட்டகுறை 'திரு திரு துரு துரு'


ரொம்ப ஓவராத் தான் ஒய்வு எடுத்துட்டேன் போல பதிவுலகத்திலிருந்து ... புரியுது உங்கள் ஆதங்கம்... வலைப்பூவை எட்டிப்பார்த்துட்டு ஏமாற்றத்தோடு தொடர் கதைக்கான முடிவு கிடைக்காமல் போன அனைவரும் .... மன்னித்து மறப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு...
மீண்டும் உங்கள் அன்புச் சகோதரி- நண்பி (நான்தான்) பதிவுக்களத்தில்..
தொபுக்கடீர்னு குதித்து இனியும் ஏமாற்றாமல் இருக்க வந்திருக்கிறேன்..............
துரு துரு டயானா திரு திரு முழியுடன்.... தொடர்கிறது....

ஞாபக மீட்டலுக்காக கடந்த பதிவிலிருந்து............

//அந்த ஒருநாள் வகுப்புக்குள் திடீர்ச்சோதனை... என்னிடம் இருந்த cassette மாட்டிட்டுது..
அது ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' பாட்டு cassette ...சோதனைசெய்த மாணவத்தலைவி ''I have found it '' என்று சொல்ல....
''கண்டுபிடிச்சிட்டாய்யா கண்டுபிடிச்சிட்டாய்யா'' இப்படி மனசு வடிவேல் sytle இல்படபடக்க....
என்ன செய்றதெண்டு தெரியாம திரு திருன்னு முழித்து நின்றபோது....//



இனி

மின்னல் வேகத்துல ஒரு யோசனை .. அப்டியே ஒய்யாரமாய் மனசோரத்தில் ஆட

மாணவத்தலைவியிடம் துணிந்து பொய் சொன்னேன்...

இந்த cassette ...... (அதிபர்)SISTER 'S FEAST க்காக நடனம் பழக கொண்டுவந்தது.....என்று ஒருமாதிரி சொல்லி சமாளிச்சாச்சு என்றாலும்.... மாணவத்தலைவி என்ன விட்டபாடில்ல...
பதில வந்து SISTER 'ட்ட(அதிபர்) சொல்லு என்று கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டா.....

ஒரு மாதிரி SISTER 'ட்ட (அதிபர்) உங்கட FEAST 'க்காகத்தான் டான்ஸ் பழக CASSETTE 'ஐ திருட்டுத்தனமாக கொண்டு வந்தேன் என்று சொல்ல..அவர் என்ன ஒருக்கா மேலேயும் கீழேயும் பார்த்துட்டு....ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சிட்டு... சரி பரவாயில்ல ... ஆனா எங்க PLAYER ? CASSETTE 'ஐ மட்டும் வச்சுக்கொண்டு பிளேயர் இல்லாம எப்படி ? என்று கேட்ட கேள்வியில ஆடிப்போன நான் அரைகுறையாய் ஒரு முழுசு முழுசிப்போட்டு.... இன்னொரு பொய்யை எடுத்து விட்டேன்... என் உயிர்த்தோழி சங்கீதா கொண்டு வாறன் என்று சொன்னவ ஆனா மறந்துட்டு வந்துட்டாவாம் என்றேன்.. அடுத்து அவளையும் கூப்பிட்டு விசாரணை...

எனக்கு உசிரே போன மாதிரி ஆயிட்டுது.... அவள் என்னத்த உளறிக்கொட்டப் போறலோன்னு...
நல்லவேளை சாடிக்கேத்த முடியா அவளும் ஒரு மாதிரி சமாளிச்சா...

பாதி நம்பியும் பாதி நம்பாமலும் ஒரு மாதிரி 1/2 மணித்தியாலத்தில் எங்கள போக விட்ட SISTER (அதிபர்).... ''FEAST நாளில் நல்ல ஒரு PERFORMANCE தரவேண்டும்'' என்று கட்டளையிட்டது....மட்டும் தான் எங்கள் காதில் விழுந்தது... தப்பிச்சா போதும் என்று ஓடி வந்து வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டோம்...

பிறகென்ன இடை வேளையில்
அப்படியே மாணவிகள் புடை சூழ ''நடந்தது என்ன'' பாணியில் இருவருமாக அதிபர் அலுவலகத்துக்குள் நடந்தவற்றை விளக்கினோம்...

கதம் கதம் ..............


என்ன .... இன்னும் என்ன முடிக்க விடுறீங்க இல்ல ............ஓஓஓஓ FEAST நாளில் நாங்க PERFORM பண்ணினது எந்தப்பாட்டுக்குன்னு கேட்குறீங்களா ??
இதோ இந்தப்பாட்டுக்குதான்....ஆனா இது ''கண்டு கொண்டேன் '' படப்பாட்டு அல்ல ஏனென்றால் 1999 இல் அந்தப்படப்பாட்டுக்கள் வெளியாகவேயில்லை..உண்மையிலேயே மாட்டுப்பட்டது 'தாஜ்மஹால்' காஸ்செட்டே(CASSETTE..) ஆனால் அதன் மேலுறையில் ''கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் விரைவில்'' என இருந்தது.... ஹி ஹி..எல்லாம் ஒரு திருப்பம்தான்...

ஆசிரியர் தினத்துடன் சேர்த்தே SISTER ' ஓட FEAST ஐயும் கொண்டாடினோம் 1999 இல்...
(அறிவியல்-போட்டி காரணமாக நேரம் போதவில்லை எனவே A . R . ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியான ஒரு குட்டிப் பாட்டைத்தேர்ந்தெடுத்து பழகி ஆடினோம்)



பட்டப்பகலில் சூரியன் மந்த கதியில் காய்ந்து கொண்டிருந்தபோது... நாங்க நிலா காய்கிறது பாட்டுக்கு ... ததிங்கினத்தோம் தத்தோம் ....



இந்த 'திரு திரு துரு துரு' அனுபவம் பிடித்திருந்தால் அன்புடன் பின்னூட்டமிடுங்கள்....
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Sunday 14 February 2010

''துறு துறு திரு திரு''வுக்கிடையில் காதல் கொஞ்சம் அதை கவிதை மிஞ்சும்


படித்து ரசித்த கவிதை அதுவும் ... காதலை விஞ்ஞானம், கற்பனையுடன் சேர்த்துக்குழைத்த கவிதை...

படித்து ரசித்ததால் பகிர்வதற்கு மனம் துடிக்கிறது ....


புவிஈர்ப்பினால் புவியில் விழுந்து காயப்பட்டுப் போகிறது ஆப்பிள்...

நல்லவேளை காதலின் ஈர்ப்பினால் தடுக்கிவிழும் போதெல்லாம்

என்மீதே விழுகிறாய்

காயமே இல்லாமல் !



நன்றி "கொஞ்சும் கவிதைகள் " (சப்ராஸ் அபூபக்கர் சொன்னது)

( நான் சொல்லும் நன்றி சப்ராஸ் அபூபக்கருக்கு முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்கு)




ITHU என்னன்னு பார்க்குறீங்களா ??


இதான்.... அந்தக்காலத்துல ஏவாளும், ஆதாமும் கடிச்சிட்டு மிச்சம் வச்ச ஆப்பிள்..


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday 10 February 2010

துறு துறு டயானா... திரு திரு முழியுடன்!

எனது பள்ளி வாழ்க்கை பற்றி மட்டுமே எழுத புதிய வலைப்பூ ஒன்றைத் தொடங்கலாமா என்று யோசித்தபோது 'கரவைக்குரல்' விடுத்த தொடர் பதிவுக்கான அழைப்பு இந்த wisdomblabla வை எட்டிவிட்டது. அதனால் இதிலேயே சில அனுபவங்களை தற்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அம்மா வயிற்றுக்குள் இருந்து புரண்ட வேளையிலிருந்தே நான் இசைப்பிரியை, பைத்தியம், etc .. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். விவரம் தெரிந்த பள்ளி வாழ்க்கையில் விட்டு வைப்பேனா ?? 1992 இன் பின் சொல்லவே தேவையில்லை... ARR இன் இசைக்கு மட்டுமே தனியொரு அடிமையாக இருந்தேன் என்றுகூட சொல்லலாம். ARR இன் இசை எப்படி வளர்ந்த வண்ணம் இருந்ததோ அதுபோலத்தான் என் குறும்புத்தனங்களும்....அடாவடித்தனங்களும்

எங்கள் பாடசாலைக்குள் CASSETTES எடுத்துச்செல்வது தடை செய்யப்பட்டிருந்தது... ஆனால் புதிய பாடல்கள் கொழும்பில் வெளியான உடனேயே 2 நாட்களில் என் கரம் கிட்ட வேண்டும் என்பது நான் என் உயிர்த்தோழிக்கு(சங்கீதா) இட்ட அன்பு வேண்டுகோள்...(1995 இல்- அவள் என் தோழியர் குழாமில் இணைந்தபோது)

இந்த புதுப்பாடல் CASSETTES களை உடனுக்குடன் பெற்றுக்கொடுப்பவர் அவளுடைய கொழும்பு மாமா....


CASSETTES பரிமாற்றம் இடம்பெறுவது பாடசாலையில் தான்......


இன்றும் ஞாபகம் இருக்கிறது - ரங்கீலா, முத்து, லவ்பேட்ஸ், இந்தியன், காதல் தேசம், மின்சாரக்கனவு, இருவர், ரட்சகன், ஜீன்ஸ், என் சுவாசக்காற்றே, படையப்பா, காதலர் தினம், தாளம், சங்கமம், ஜோடி, முதல்வன், தாஜ்மகால் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...சுடச்சுட பாடல்களைப்பெற்று செவிமடுத்ததை....


கொழும்பு வாசிகளுக்கு இந்தப்பாடல்களைப் பெற்றுக்கொள்வது பெரிய விடயமே இல்ல.. ஆனா நுவரெலியாவில் இந்தப்பாடல்களை அவை வெளியான 2 , 3 நாட்களிலேயே பெற்றுக்கொள்வது பெரிய விடயம்...ஏனென்றால் ரெகார்டிங் கடைகளில் கூட அந்தப்பாடல்கள் வந்திருக்காது....இப்படியிருக்க... இந்தப்பாடல்களை வாண்டுகளாக இருந்த நாங்கள் வைத்திருந்தது எங்களைப்பொறுத்தவரை அந்தக்காலத்தில் பெரிய............. விஷயம் (இப்ப நினைச்சா சிரிப்புத்தான் வருது...)


பாடசாலையில் என்னதான் தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை உடைத்து, மீறி சில விஷயங்களை செய்துவிட்டு 'COLLARS -UP' பண்ணுவது எங்களுடைய பழக்கம்... ஹி ஹி ..(உங்களிடம் கூட இருக்குமே)


இப்படி நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக(பள்ளிநாட்களில் எழுதின கட்டுரை சிறுகதையெல்லாம் ஞாபகம் வருது) எங்கள் cassette பரிமாற்றம் இடம் பெற்று வந்தபோது ஒரு நாள் ..........

''டடாங் டம்'' (situation effect )

அந்த ஒருநாள் வகுப்புக்குள் திடீர்ச்சோதனை... என்னிடம் இருந்த cassette மாட்டிட்டுது...

அது ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' பாட்டு cassette ...

சோதனைசெய்த மாணவத்தலைவி ''I have found it '' என்று சொல்ல....

''கண்டுபிடிச்சிட்டாய்யா கண்டுபிடிச்சிட்டாய்யா'' இப்படி மனசு வடிவேல் sytle இல் படபடக்க....

என்ன செய்றதெண்டு தெரியாம திரு திருன்னு முழித்து நின்றபோது.....
(தொடரும்)
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Tuesday 9 February 2010

'மிஸ்'ஆக விடுவோமா ??

கிட்டத்தட்ட ஒரு மாதம் பதிவிடாமல் ஒய்வு எடுத்துக்கொண்டேன் போல.... (இப்டித்தான் சொல்லித்திரிய வேண்டி கிடக்கு வாசக நெஞ்சங்களிடம் இருந்து தப்பிக்க)

கடந்த ஆண்டில் என் கவனத்துக்கு புலப்பட்டும்கூட, மேற்கொண்டு எதிர்ப்பதிவிட முடியாமல் போனவற்றுக்கான பதிவாக இப்பதிவு....


1 )

http://sshathiesh.blogspot.com/2009/09/blog-post_13.html

பதிவுக்கு சொந்தக்காரர் சகோதரன் சதீசன் சத்தியமூர்த்திக்கு முதற்கண் என்னுடைய நன்றிகள்...அவர் என் வலைப்பதிவுக்காக அன்போடு தந்த 'SCRUMPTIOUS BLOG AWARD 'காக.


வெளிப்படையாக சொல்லப்போனால் நான் அடிக்கடி பதிவுகள் இடுவது கிடையாது.. எழுத 1000 - 1000 ஆசைகளும், யோசனைகளும் இருந்தாலும் பதிவிடுவதற்கான நேரம் அவ்வளவாக கிடைப்பதில்லை...((

நேரம் கிடைக்கும்போது நண்பர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பும் தொடுப்புகளை வைத்து அவர்களின் பதிவுகளை வாசித்து பின்னூட்டமிடுவதோடு சரி... அதுவும் இப்போது குறைந்து வருகிறது....(((


சதீஷன் தம்பி நல்ல ஒரு படைப்பாளி....எந்த நேரமும் ஒருவித ஆர்வத்துடனேயே திரிந்து கொண்டிருப்பவர்....வெற்றி பண்பலையில் அவருடைய நிகழ்ச்சிகளை செவிமடுத்திருக்கிறேனேயொழிய தனிப்பட்ட முறையில் எனக்கு அவரைத் தெரியாது

அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது இந்தப்பதிவுலகம்தான்...

முதன் முதலாக நான் வாசித்த அவருடைய பதிவு கந்தசாமி - திரைப்படம் பற்றியது..

அந்தப்படம் வந்த ஆரம்பத்தில்... தாறுமாறாக விமர்சனங்கள் விதைக்கப்பட்டபோது.... இவருடைய விமர்சிக்கும் சிந்தனை சற்று வித்தியாசமாகவே இருந்தது.. இதுவே என்னை இவருடைய பதிவுகளை வாசிக்கத்தூண்டியது.. அத்தோடு அவருடைய பதிவுப்பக்க தலைப்புகள் சரவெடியாகவே இருக்கும்.. அவை வாசிக்கத்தூண்டும்..
இப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து 'SCRUMPTIOUS BLOG AWARD' பெற்றுக்கொண்டது மகிழ்ச்சியே
...

2) http://enularalkal.blogspot.com/2009/12/2009-1.html அடிக்கடி என் வலைப்பதிவை எட்டிப்பார்த்து.. குறைநிறைகளை சுட்டிக்காட்டி என்னை ஊக்குவிக்கும் அன்புப்பதிவர் 'வந்தி' அண்ணா, தான் 2009 இல் ரசித்த பதிவுகள் பற்றிய ஒரு தொகுப்பைத் தந்திருந்தார் ..அதில் என்னுடைய ''அவதார்'' திரைப்படம் பற்றிய பதிவு அவரைக்கவர்ந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.. நன்றி !


பலரின் பதிவுகளை தேடித்தேடி வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் சுடச்சுட பதிவுகள் தந்து அசத்துபவரும் கூட... தன் வேலைகளுக்கு மத்தியில் எப்படி பதிவுகள் பலவற்றை வாசிக்கிறார்- 'பின்'னூட்டமிடுகிறார் என்று... நான் அவரைப்பார்த்து வியந்ததுண்டு... தொடரட்டும் அவர் சேவை....


3) http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_19.html எனது பள்ளி-வாழ்க்கை குறும்புத்தனங்கள், நண்பர்கள் பற்றிய பதிவை வேண்டி நின்ற கரவைக்குரல் - பாவம் என் பதிவுக்காக காத்திருந்து காத்திருந்தே அவர் குரல் கரைந்திருக்கும்.. இன்றுவரை அவருடைய மூச்சுப்பேச்சையே காணவில்லை... தாங்கள் எங்கே உள்ளீர்கள் ?? கொஞ்சம் வந்து விட்டுப்போங்கோ

அடுத்து அரங்கேறப்போவது உங்கள் பதிவுதானுங்கோ..!

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Sunday 10 January 2010

விண்ணை தாண்டுமா???? VTV பாடல்கள்

..எவ்வளவுதான் கட்டிக் காக்கப்பட்டிருந்தாலும் உலகளாவிய உத்தியோகபூர்வ வெளியீட்டின் முன்னர் இணையங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள்... தடுப்புகளைத் தாண்டி வந்து தொட்டு பலரின் எதிர் பார்ப்புகளை முட்டிக்கொண்டும் இருக்கிறது.

ஏற்கனவே நானும் ஒருசில பாடல்களை கேட்டு பெற்று பத்திரப்படுத்தி வைத்திருந்தாலும் இன்று ஒட்டுமொத்த பாடல்களும் இணையத்தில் வெளியான நிலையில்

அந்தப்பாடல்களை உங்கள் முன்னிலையில் அலசிப்பார்க்கும் ஆசையில் இந்தப்பதிவு !

பொதுவாக ஒரு பாடலைக் கண்மூடிக் கேட்கும்போது A .R .ரஹ்மான் இசை புறம்பாய்த் தெரியும்.

அந்த தன்மை விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களில் இருந்தாலும், அவருக்கே உரிய தனித்துவம் (SPECIALITY) இந்தப் பாடல்களின் வாயிலாகப் புலப்படவில்லை.

ஹோசனா(விஜய் பிரகாஷ், BLAZEE , SUZZANE ) மற்றும் ஓமனப்பெண்ணே(பென்னி தயாள்) பாடல்களில் ONE LOVE அல்பத்தின் தாஜ்மஹால் பாடலின் தாக்கமும், வேறு சில பாடல்களின் கலவை கலந்த நிலையிலும் தெரிவதோடு,

BLUE ஹிந்தி படத்தின் FIQURAANA பாடலின் தாக்கம் அன்பில் அவன்(தேவன், சின்மை) மற்றும் கண்ணுக்குள்(நரேஷ் ஐயர்) பாடல்களில்....

ஆரோமேலே(அல்போன்ஸ்) பாட்டு ஆரம்பம் பக்கா ''ஏலே நேரம் வந்திருச்சி''- சக்கரக்கட்டியில் இருந்து..ஆனால் மீதிப்பாதியின் கலவை புதிது...

''மன்னிப்பாயா''(ஸ்ரேயா கோஷல் , A .R .R ) பாட்டு கேட்க நல்லா இருந்தாலும் ஏதோ ஒரு குறை உள்ளது....(மன்னிப்பாயா என்ற வார்த்தையை பாடலில் இருந்து தவிர்த்திருக்கலாம்... காரணம் அந்தப்பாட்டு எனக்கு ''குரு'' திரைப்பட ஆருயிரே பாடலை வார்த்தைகளால் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறது..

கார்த்திக் பாடிய தீம் பாட்டு சுமார் ரகம்....

இந்த அத்தனை பாடல்களையும் கிட்டத்தட்ட மாறி மாறி 5 தடவைகள் கேட்டுவிட்டு தான் இந்தப்பதிவை இடுகிறேன்....

ஒருவேளை படம் வெளியான பின்னர் பாடல்கள் காட்சியமைப்புகளோடு இன்னும் சிறப்பாயமைய வாய்ப்புகள் இருக்கு...


என்றாலும் ஏதோ ஒரு ஏமாற்றம்.. வழமையாக இசைப்புயலின் பாடல் கேட்கும் போது ஏற்படும் ஒருவித மெய் சிலிர்க்கும் அனுபவம்..(VTV க்கு முதல் வெளிவந்த சக்கரக்கட்டியின் மருதாணி பாடலின் INTERLUDES இல் இருந்து கூட அந்த அனுபவம் எனக்கு கிடைத்தது..) ஆனால் இந்தப்படத்தின் ஒரு பாடலில் கூட அந்த அனுபவம் ஏனோ எனக்கு ஏற்படவில்லை...:(

இசைப்புயலின் தீவிர ரசிகர்கள் இந்தப்பதிவை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என எனக்குத் தெரியவில்லை..

என்னைப்போல சில இசைப்புயல் வெறியர்கள் இதே உணர்வுடன் இருப்பது போல்
பலர் அனைத்து பாடல்களும் நன்றே என்று சொல்லவும் செய்கிறார்கள்..

எனினும் பாடல்கள் பற்றிய ரசனை அவரவர் உள்ளச்செவியை பொறுத்தது... அது மட்டுமல்லாமல் முகம்கொடுக்கும்
EXPOSTURE யும் பொறுத்தது.

VTV பாடல்கள் பற்றிய என்னுடைய உணர்வு இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் ....இசைப்புயல் ஹிந்தி திரையிசைக்குள் ஆதிக்கம் செலுத்த முழுமையாக நுழைந்த பின் அந்தப்பாடல்களை கேட்டு பழகியதால் எனக்கொள்ளலாமா ??

ஆம் இப்ப அப்படித்தான் என்னை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்...


இதுவரை கேட்டதில் ஹோசனா பாடலும், ஓமனப்பெண்ணே பாடலும் என்னுடைய தெரிவாக அமைகின்றன..

ஹோசனா பாடலின் ''ஹெல்லோ... ஹலோ'' என வரும் BLAZEE யின் கணணிமயப்படுத்தப்பட்ட குரல் பிடித்திருப்பதால்... இப்போது என் RINGTONE கூட அதுவாகிப்போனது...
என்ன செய்ய எல்லாம் A .R .R இன் மாயம்!


இனி உங்கள் அபிப்பிராயம் ?? தொடரட்டும்
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Sunday 3 January 2010

''PAA'' ('பா'சம் - 'பா'ர்வைகள் - 'பா'டம்)

முன்குறிப்பு:
''PAA''- நிச்சயமாக இது ஹிந்தித் திரைப்பட விமர்சனம் அல்ல


ஒரு ரயில் தன் பயணத்தை ஆரம்பிக்கும் தருணம் ,

ஒரு வயதானவரும், 25 வயது பூர்த்தியான அவருடைய மகனும்..

எதிர்ப்பக்க இருக்கைகளில் ஒரு இளம் ஜோடி...இவர்களை கவனித்த வண்ணம்..

ரயில் தன் பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு கணமும் அந்த இளைஞனின் கண்களிலும் உள்ளத்திலும் அவ்வளவு குதூகலம்!


யன்னல் பக்கத்தில் அமர்ந்து கொண்ட அவன் தன் கரத்தை வெளியே நீட்டி தழுவிச்செல்லும் காற்றை அனுபவித்தான். பின் மரங்களைக் காட்டி "அப்பா பாருங்கோ மரமெல்லாம் பின்னோக்கி அசையுது" என்றான்.

வயதானவரும் புன்னகைத்தவாறே தன் மகனின் வியப்புகளுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தார்.


எதிர்ப்பக்கத்தில் இருந்த ஜோடிக்கு ஒரே குழப்பம்... என்னடா 25 வயதுப் பொடியன் சின்னப்பிள்ளை போல நடந்து கொள்கிறானே என்று...

குழப்பமும் வியப்பும் ஒருங்கே சேர அவனை தொடர்ந்தும் கவனித்துக்கொண்டு இருந்தது அந்த ஜோடி..



சிறிது நேரத்தில் '' அப்பா பாருங்கோ குளத்தில பறவை நீந்துது என்றான்'' மகிழ்ச்சி பொங்க....


அந்த நேரத்தில் மழை வரவே மழைத்துளிகள் அவன் கைகளில் பட, தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அப்பா இப்போது மழைத்துளிகள் என்னைத் தொடுகின்றன என்று ஆனந்தத்தில் துள்ளினான்...


இதுக்குமேலும் பார்க்க சகிக்காமல், அந்த ஜோடி பெரியவரிடம் பேச்சு கொடுத்தது..

உங்கள் மகனை நீங்கள் நல்ல ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து ஏன் வைத்தியம் பார்க்கக்கூடாது ? என்று கேட்டது...


''ஓம் நாங்கள் இண்டைக்கு தான் ஆஸ்பத்திரியில் இருந்து வாறம்... என்ட மகனுக்கு இன்று தான் அவனுடைய வாழ்க்கையில் முதன் முதலாக தன் இரு கண்களாலும் உலகத்தைக்காணும் பாக்கியம் கிடைத்திருக்கின்றது'' என்றார்...அந்தப்பெரியவர்



பிறந்திருக்கும் புது வருடத்தில் எதோ நம்மால முடிஞ்ச ஒரு செண்டிமெண்ட் கதையுடன் பதிவுலகத்தை எட்டிப்பார்த்து உங்கள் மனதிலும் கூட நல்ல விஷயத்தை இந்தக்கதை மூலமாக பதித்துச் செல்லலாம் என்ற நப்பாசையில்....படித்து பாதித்த இந்தக்கதை சொல்லும் படிப்பினை:


''எந்த ஒரு விஷயத்தையும் முற்றுமுழுவதாய் அறிந்து கொள்ளாமல் முடிவுக்கு வராதீர்கள்''

'கதை' மனதை எதோ பண்ணுதில்ல?

இத இத இதத்தான் உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்த்தேன்....
வர்றேன்..
(வடிவேல் கொடுத்த ட்ரைனிங் ஹி....ஹி...)
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf