Friday, 1 March 2013

2013 இல் முதல் சந்திப்பு - GETTYIMAGES விளம்பரத்துடன்

வணக்கம் என்ன எல்லோரும் நலமா ? 2012 இல் எந்த ஒரு பதிவிற்கும் இடமளிக்காத என்னுடைய வலைத்தளம் இன்று இந்த ஆண்டில் மீண்டும் கால் பதிக்கிறது.
 எங்கே உங்கள் கரகோஷம் ? ஆ அப்படித்தான்.... நன்றி நன்றி நன்றி 





சிலர் யோசித்திருக்கலாம் இந்த டயானா என்ன ரொம்ப பிஸி ஆகிவிட்டாளோ  என்று ? என்ன செய்ய ஒரு தாயான பின்னர் தானே தெரிகிறது வாழ்க்கை எவ்வளவு பரபரப்பானது என்று. 

புதிய அனுபவம் ஆனால் புத்துணர்வூட்டும் அனுபவம் இந்தத் தாய்மை . (அனுபவித்தவர்கள் என்னுடன் சேர்ந்து ஓம் என்பீங்க)  


அழகான ஓர் கவிதை இல்லையா ?

சரி இருக்கட்டும் ..

நீண்ட நாட்களின் பின் நான் பார்த்து வியந்த ஒரு காணொளி விளம்பரத்தை உங்களோடு பகிரும் நோக்கில் நான் இங்கே இப்போது...

நீங்கள் பார்க்கப்போவது gettyimages  இன் விளம்பரம்.. சொன்னால் நம்புங்க இந்த புகைப்பட  காணொளிக்குள் 873 புகைப்படங்கள் உள்ளடக்கம்.. சொல்லி நம்பாதவங்க இப்போ இந்த விளம்பரக் காணொளியை பார்த்து நம்புங்க..

என்றாலும்  ஒரு சின்ன தவறு இந்த காணொளிக்குள் உண்டு... அது என்ன என்பதை கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம்...


உங்கள் பின்னூட்டங்கள் இந்த வலைப்பூவின் ஞாபகச்சின்னங்கள்... எனவே மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லுங்கள்...


மீண்டும் சந்திப்போம்....வரட்டா !




- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 19 November 2011

பிரம்மன் படைத்த ''பிரப்பம் பழம்'' !

என்னடா கேள்வியே படாத பழமாக இருக்கு ?? என்பவர்களுக்காக மட்டும் இந்தப்பதிவு.

நானும் முதலில் கேட்டபோது என்னது ????????? என்ன பழம்? என்று ஒன்றுக்கும் இரண்டு தடவைகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

ஆம்! பிரப்பம் பழம் தான்


நடந்தது இது தான் ? வழமை போல் முகாமைத்துவ கூட்டம் ஒன்றுக்காக தலைமைக் காரியாலயத்துக்கு வேனில் போய்க்கொண்டிருக்கையில்.......... பெருங்குடல் சிறுகுடலை விழுங்குமளவிற்கு பெரும் பசி.
சாப்பிட யாரிடமாவது ஏதாவது இருக்குமா என்ற கேள்விக்கு எங்கள் வானொலி ஒலிப்பொறியியலாளர் -நண்பன் பிரஜீவ் நீட்டிய பழம் தான் இது. (மட்டக்களப்பில் இப்பழம் கிடைக்கிறதாம்)




பெயர் மட்டும் அல்ல பார்க்கவும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கவே ...... அதை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.... பின்னர் பிரஜீவ் அந்த தோலை நீக்கிப்போட்டு உள்ள இருக்கும் பழத்தை மட்டும் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு... சாப்பிட
விருப்பமில்லாட்டி திருப்பித் தாங்க ஏனன்டா ... இது சரியான விலை என்ற அவருடைய பத்திரப்படுத்தல் வார்த்தையை கேட்டு உள்ளுக்குள் சிரித்தபடியே ... ஒரு சிறு கடி கடித்துப் பார்த்தேன் .......

முகம் முதலில் அஷ்ட கோணலானது......... அந்தளவுக்கு புளிப்போ புளிப்பு.......... என்றாலும் சமாளித்தபடியே சாப்பிடப் பழகிக்கொண்டேன்...
''கல்சியம்பலா'' சாப்பிட்ட அனுபவத்தை இதற்காக பயன்படுத்திக்கொண்டேன்.

பழத்தை சாப்பிடும் போது எனக்குள் ஒரு கேள்வி ...
இந்தப்பழம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கக்கூடும்? சரி பழம் பற்றி தேடிவிட்டு ஒரு பதிவிடலாம் என்று பார்த்தால்...கூகுளே கைகொடுக்கவில்லை ...கிடைத்தது கீழ் கண்டது மட்டுமே !


பிரம்பு

இது நீர்நிலைகளின் கரையில் பிணக்கத்தையுடைய தூறாக வளர்ந்திருக்கும். செடி போன்றிருத்தலின், “அரிற்பவர்ப் பிரம்பு” எனப்படும். இதன் தூற்றில் நீர்நாய் பதுங்கி இருக்கும். பிரப்பம்பழம் கோடுகளை உடையது; அதனைக் கெண்டை உண்ணும். அப்பழத்தின் புறத்தை நீர்நாயின் புறத்திற்கு உவமை கூறுவர்.

இப்பழம் பற்றி அறிந்தவர்கள் மேலதிக விடையங்களை இப்பதிவின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் ........
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday, 17 June 2011

ஃபுகுஷிமா முயலுக்கு வைத்த ஆப்பு ! (Fukushima Mutant Rabbit)

இந்த உலகில் ஆக்கங்கள் ஒரு பக்கம் தன் முகம் காட்டிகொண்டிருக்க
அழிவுகள் தன் மறுமுகத்தை காட்டிக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் அதாவது கடந்த மார்ச் மாதமளவில் ஜப்பானில் ஏற்பட்ட FUKUSHIMA அணு மின்நிலையத்தின் மூன்றாவது அணு உலை வெடித்ததன் காரணமாக வெளியான அணுக்கதிர் வீச்சு தற்போது இருமடங்கான நிலையில் செவிகள் அற்ற நிலையில் ஒரு முயல்குட்டி பிறந்துள்ளது, அதுவும் FUKUSHIMA உலையிலிருந்து 18 மைல் தூரத்தில்.

அந்த முயல் குட்டியை நீங்களும் பாருங்க

அணுக்கதிர் வீச்சு முயலின் மரபணுவில் தீடீர் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளமையே (மரபணு விகாரம்) இதற்கு காரணம் என விஞ்ஞானிகளால் அஞ்சப்படுகிறது.

மரபணு விகாரம் காலா காலமாக இடம் பெற்று வருவது ஒன்றும் புதிதல்ல ஆனால் இப்போ உலகம் போற போக்கை பார்த்தல், அதில் இடம் பெரும் எதிர்பாராத நிகழ்வுகளினால் மாதக் கணக்கிலேயே அதன் விளைவுகளை நாம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது.


ஆனா இதை என்னவென்று சொல்வது ?

Fukushima mutant rabbit: "An earless bunny has been discovered just outside the radiation zone of the Fukushima nuclear plant in Japan."


நாயகன் பாணியில் ஒரு கேள்வி /பதில்

இது நல்லதுக்கா கேட்டதுக்கா...? தெரியலேயேப்பா..........


(POST A COMMENT ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன)

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday, 16 June 2011

ரியல் எந்திரன் (Real Enthiran)


விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சி எந்தளவுதூரம் இந்த உலகை வளைத்துப் போட்டிருக்கிறது என்பதை கீழுள்ள காணொளியை கண்ணுற்றால் புரியும் .

மனிதவர்க்கம் புகுத்தநினைக்கும் மனிதனைபோன்ற ரோபோ உலகின் அதிநவீன கண்டுபிடிப்பும் உருவாக்கமுமாக 3 Geminoids/Anroids அவற்றின் உரிமையாளர்களோடு Roboticist Prof.Hiroshi Ishiguro(Osaka University), அவரின் பெண் உதவியாளர், Prof. Henrik Scharfe(AALBORG University) ருப்பதை படத்தில் காணலாம்

இவற்றைக் கண்ணுற்றபோது இயக்குனர் சங்கர் எந்தளவுதூரம் எதிர்காலக்கணிப்பை நிகழ்கால ஆராய்ச்சிகளில்
இருந்து மதித்து தன்னுடைய எந்திரன் படத்தின் மூலமாக தந்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்க்கையில் உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது.

மொத்ததில இந்தப்பதிவிலிருந்து நான் என்ன சொல்ல வாறன் எண்டா

ஒரு காலம் வரும்
ரோபோக்கள் இவ்வுலகை ஆட்சி புரியும்
ஆனால் அதைப்பார்க்க நானோ நீங்களோ இருக்க மாட்டோம்...
Ha ha ha..
இது எப்படி இருக்கு?

அட இவர் யார் எண்டு பார்க்கிறீங்களா... இவர்தான் நம்மட ShakthiFM தந்திரன்
DOT.............................................................................................


(உங்கள் பின்னூட்டங்களை கீழேயுள்ள Post a Comment பொத்தானை அமுக்கி பதிவுசெய்யுங்கள் )

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 2 March 2011

அதிசய ராத்திரி - 2010 இன் சிவராத்திரி

சிறு வயது முதல் நான் மிகவும் விரும்பி அனுஷ்டித்து வரும் இந்த சிவராத்திரி தினம் இம்முறையும்.. கடிதென விரைந்திடும் காலச்சக்கரத்தில்..

ஆனால் இம்முறை விரதம் பிடிக்க முடியாத நிலை என்றாலும் விடிய விடிய விழித்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை (புதிய உறவான எனது குழந்தையோடு...)
புதிய அனுபவம் தான்.....

இன்று இந்தப் பதிவின் நோக்கம் கீழே உள்ள காணொளியை கண்ணுருவோருக்கு புரியும்.

'கடந்த வருடம் நுவரெலியா காயத்திரி கோயில் வளாகத்தில்
கமெரா கைப்பேசியில் சுட்ட கண்கொள்ளா அதிசயக்காணொளி'

முகில்கள் சிவனின் கண்களை ( அப்படித்தான் இதை கண்ணுற்றோர் சொல்கிறார்கள் ) உங்களுக்கு புலப்படுத்துகிறதா ?

இன்று இரவுதோறும் பக்திப் பரவசத்தோடு சொல்வோம் 'ஓம் நமசிவாய'

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday, 14 February 2011

உலககெல்லாம் ஒரு சொல்: ஒரு சொல்லில் உலகம் - காதல்


காதல் உள்ளங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday, 28 January 2011

குடிப்போமா... தேத்தண்ணி ?

எப்படி போகுது வாழ்க்கை? உங்களைப்பார்த்து தான் கேட்கிறேன்...

ஆ... என்ன ... என்னுடைய வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தீங்களா ?

பரவாயில்லையே ... உங்களைபோன்ற பதிவுலகவாசிகள் என்னை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க.... உண்மைய சொல்லவேண்டுமென்றால்
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு தொடர் ஒய்வு.. வீட்டில் இருந்து கொண்டே அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டு
பதிவுலகையும் ஆசையுடன் எட்டிப்பார்க்க முடிகிறது....

கண்களும் மனதும் எட்டிப்பார்த்தாலும்
விரல்கள் ஒரு பதிவை இட்டுச்செல்லவே ஆசைப்படுகிறது.... அவற்றின்
ஆசையை நான் ஏன் கெடுப்பானேன்....?

எந்த ஒரு விஷயத்தை நாங்கள் வாழ்க்கையில் சந்தித்தாலும் அதில் முதல் முதல் நாங்கள் எதிர்கொள்ளும் அனுபவத்தை யாராலும் மறக்க முடியாது..
பள்ளியின் முதல் நாள், முதல் காதல், முதல் முத்தம், ... இந்த வரிசையில் முதல்
வேலை கூட......


சக்தி பண்பலைக்குள் வரும்முன்னர் ஒரு தேயிலை நிறுவனம்(DILMAH -டில்மா) எனக்கு பல வேலைகளை கற்றுத்தந்தது...வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்காக....
அதுவும் உயர்தரத்தை முடித்துக்கொண்டு, பள்ளிவாழ்கையை நிறைவு செய்து கொண்டு, உலகை எதிர்கொள்ளும் புதிய உத்திகளை கற்றுக்கொள்ள எனக்கு உதவிய நிறுவனம் அது.. காரணம் அதனுடைய கட்டுக்கோப்பான ஒருங்கியம்.
ஒரு சாதாரண அடித்தள வேலையைக்கூட எவ்வாறு பூரணமாக செய்ய வேண்டும்... அதையே இன்னொரு மாதிரி சொல்வதென்றால் ''பக்காவா''
செய்வதற்கான ஆற்றலை கற்றுத்தந்த நிறுவனம்.

நான் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்றபடியால் ஆய்வுகூடத்தோடு சம்பந்தமான வேலையில் சேர வேண்டுமென்ற ஆவலில் தந்தையின் வழிநடத்தலுடன் இந்த
டில்மா(DILMAH) நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டுப்
பிரிவில் சேர்ந்தேன்.

இதில் எனக்கு முதல் வழங்கப்பட்ட பணி பொதிசெய்வதற்காக நிறுவனத்துக்கு
கொண்டுவரப்படும் தேயிலை மாதிரிகளை சுவைத்து தரப்படுத்துவது. 'Tea Taster' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்..
மிகவும் சுவாரசியமான வேலை ஆனால் ஒரு நாளைக்கு 100 மாதிரிகளை சுவைக்கும் போது வெறுத்தே போய்விடும்.

ஆனால் எனக்குள் ஒரு சந்தோசம் .. இந்த Tea Tasting என்பது எல்லாராலும் செய்ய முடியாத காரியம்.. காரணம் ஒரு தேநீர் மாதிரியை தொண்டையின் ஆரம்பப்பகுதிவரை இழுத்து நாவினால் அதன் தன்மையையும் தரத்தையும் உணர்ந்து குறிப்பில் எழுதி... வழங்கப்பட்ட மாதிரி முதல் கட்டத்தில் Auction இல் உடன்பட்டு பெறப்பட்ட தேயிலையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தேநீர் மாதிரியை சுவைக்கும் போது அது கொண்டிருக்கும் சுவைக்கேற்ப தரப்படுத்தலாம். COLOURY , PLAIN , FAIR , THIN... இப்படி சுவையின் தன்மையை குறித்துக் கொடுத்து உறுதிப்படுத்த வேண்டும். இதை எல்லாராலும் உணர முடியாது. இதற்கென பிரத்தியேகமான பயிற்சியும் அவசியம். ஆனால் எனக்கு தேவைப்பட்டது ஒரே ஒருநாள் தான். எனக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது. இது கடவுளின் கொடுப்பினை என்று எண்ணிக்கொண்டேன். வேலையைத் தொடர்ந்தேன்.
நாளுக்கு நாள் தேயிலை வகைகளின் தன்மை, அவற்றின் உற்பத்தி, பரிசோதனைகள் என்று எக்கசெக்கமான அம்சங்களை தேடித்தேடி படித்துக்கொண்டேன். அவை மறக்க முடியாத நாட்கள்....
அனுபவங்கள்.

தேயிலை உடற்சுகாதாரத்தில் பங்களிப்பாற்றுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். இதயத்துக்கும் நன்மை பயக்கின்றது.

குறிப்பாக
Chrysanthemum Tea - இரவு பகல் பாராமல் மூளைக்கு அதிக வேலை கொடுப்போருக்கு ஏற்றது

Wu Loong Tea/Oolong Tea - உடல் உழைப்பில் அதிகம் ஈடுபடுவோருக்கு, அசைவ உணவு உண்போருக்கு ஏற்றது

Green Tea - அதிக தூரம் பயணிப்போர் , மாசு நிறைந்த இடங்களில் பணியாற்றுவோருக்கு ஏற்றது

Green Tea + Flower Tea - அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே வேலை பார்ப்போருக்கு ஏற்றது

Wu Loong Tea + Green Tea - அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளவர்களுக்கு உகந்தது.


எப்போதும் கணனியோடு காலம் தள்ளுவோருக்கு எந்த வகையான தேநீரும் உகந்தது.
எனவே எப்போது கணனிக்கு முன்னால் நீங்கள் அமர்ந்தாலும் ஒரு கோப்பை தேத்தண்ணியோடு உற்கார்ந்து வேலையைப்பாருங்க.

அப்போ நான் போய்ட்டு வாறன் ... என்ன எங்கேயா ?? தேத்தண்ணி கோப்பைய எடுத்துக் கொண்டு வரத்தான்...


'TAA TAA' sorry TEA TAA

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 20 November 2010

இன்று எனக்கு உயர்வு தந்த சக்தி பண்பலை எனும் என் தாய்க்கு 12 ஆவது பிறந்ததினம்.......

ஒரு வாரமாக உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் மனம் திறந்து சில வார்த்தைகள்.............

இந்த இனிய நாளில் .......நீண்ட இடைவேளைக்குப்பின் எனது எழுத்துக்கள் பதிவுலகை முத்தமிடுகின்றன..

இன்று சக்தி தன் 12 ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு இருக்கும் இத்தருணம்.... எனக்கு சக்தியோடு இணைந்து கொண்டு பூர்த்தி செய்கின்ற 5 ஆண்டுகளும் 8 மாதங்களும் என்று சொல்லிக் கொள்ளலாம்..

சக்தியில் நானும் ஒரு அறிவிப்பாளராக வேண்டும் என்ற ஆசையின் உந்தலில் இணைந்து கொள்ள முற்பட்ட வேளையில் என்னிடமிருந்த 3 மூலதனங்கள்
1) நம்பிக்கை
2) கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
3) ஜனரஞ்சகமாக பிறர் ரசிக்கும்படி வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டும் என்ற ஒரு தீ .............

சக்தியின் ரசிகையாக இருந்தபோதே இவற்றை என்னிடம் இனம் கண்டு, எனக்கு உற்சாகம் தந்து ஊக்கப்படுத்தி சக்திக் குடும்பத்தோடு இணைய எனக்கு வாய்ப்பளித்த சிரேஷ்ட அறிவிப்பாளர், முன்னாள் சக்திப் பணிப்பாளர், (என்னுடைய கோட் பாதர் என்று சொன்னால் கூட தப்பில்லை)
திரு. R .P . அபர்ணாசுதன் அவர்களுக்கும்....

இப்போது நான் அடைந்துள்ள வளர்ச்சிக்கும் (பகுதி நேர அறிவிப்பாளர், அறிவிப்பாளர், வார இறுதி நாட்களுக்கான பிரதி முகாமையாளர்) , இந்தப் படிப்படியான வளர்ச்சிக்கு காரண கர்த்தாக்களாக இருந்த, இருந்து கொண்டிருக்கிற சிரேஷ்ட அறிவிப்பாளர்கள்
ஜீவா அக்கா, மயூரன் அண்ணா, கணா அண்ணா, கஜமுகன் அண்ணா, ஷெல்டன் அண்ணா, சுமன் அண்ணா, ரவுப் அண்ணா, குணா அண்ணா, உமா அக்கா, சத்ய சன்னிதா அக்கா ஆகியோருக்கும்

இப்போது எம்மை வழி நடாத்திக் கொண்டிருக்கும் சக்தி நிலையைப்பொறுப்பதிகாரி திரு.காண்டீபன் அண்ணா அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் அதே தருணம்.... 2005 இல் டிசெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை 'தபால் விருப்பம்' என்னுடைய முதல் நிகழ்ச்சி.... அந்த நிகழ்ச்சிக்காக வானலையில் நடை பயிற்றுவித்து நிகழ்ச்சியை என்னுடன் தொகுத்து வழங்கியவர் காண்டீபன் அண்ணா என்பதையும் நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

சக்தியோடு இணைந்து கொண்ட ஞாபக மீட்டல்கள் பல உள்ளன என்றாலும் இப்போதைக்கு இவை போதும் என்ற எண்ணத்தோடு ...

சக்தி கொடுத்ததும் பல
சாதனைகளாய் படைத்ததும் பல
அது இனியும் தொடரும் ...............

சக்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


சக்திக் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் 2005 - கடல் கடந்த தேசம் நாடகத்தில் பங்கேற்றபோது
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 19 June 2010

பலமும் பலவீனமும் பிரமிப்பும் ராவண்




(இந்தப் பதிவு - கண்டிப்பாக பார்த்தவர்களுக்கு மட்டும்)

1) இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படத்திலும் காட்டப்படாத அளவுக்கு காட்டின் அழகு கண்களை நிறைக்கிறது. அழகானவற்றை பிரமிக்க வைக்கும் அளவுக்கு தன் ஒளிப்பதிவின் மூலம் காட்டுவது சந்தோஷ் சிவனுக்கு கை வந்த கலை. அதை இங்கும் நிரூபித்திருக்கிறார். மலை, மழை, மரங்கள், நீர், ஏன் ஐஸ்வர்யா ராய் கூட அழகின் செழுமையில் ஒருபடி மேல்தான் இந்தப் படத்தில்.
திரையரங்கின் A/C குளிரையும் தாண்டி ஒளிப்பதிவு கண்களைக் குளுமைப்படுத்தியது எனலாம்.
(மணிகண்டனுக்கும் இதில் பங்குண்டு)



ஸ்ரீகர் பிரசாதின் எடிட்டிங்க்கும் கிரெடிட் கொடுக்கலாம். பெயரோடத்தின்போது கிராபிக்ஸ் வியக்கவைக்கிறது

2 ) சொல்லிக்கொள்ளும் படியாக வீர தீர சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும் நிறைவுக்கட்டத்தில் தொங்குபாலச் சண்டை... ஆஹா.... கமெராவின் கோணத்தில் மெய் சிலிர்க்கவைத்தது.

3) எனக்கு ஐசுவை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும் இந்தப்படத்தைப் பொறுத்தவரை ஐசுவின் கதாபாத்திரம் மட்டுமே மனதை நிறைக்கிறது...திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் கூட.



4) இசைப்புயலின் BGM மிரட்டுகிறது காட்சிகளுக்குத் தக்கவாறு... என்றாலும் இந்தப்படத்தை பொறுத்தவரை காட்சிகளுக்கிடையில் பாடல்களுக்கான செருகல்கள் அர்த்தமற்று இருக்கின்றன.


5) ராவண் கதாபாத்திரத்தை இன்னும் பலமானதாகக் காட்டியிருக்கலாம்
(இது எனது உள் மனதின் ஏக்கம்... ரொம்ப எதிர்பார்தேன்பா)


6) நவீன ராமாயணம் + அதன் திருப்பங்கள் - இயக்குநர் சிகரம்
மணிரத்தினத்துக்கு மட்டுமே உரிய சிறப்பு

7) மணிரத்தினத்தின் திரைப்படங்களுக்குரிய இன்னுமொரு சிறப்பு - வசனங்கள். ஆனால் இந்தப்படத்தைப் பொறுத்தவரை அவ்வளவு உயிர்ப்பான வசனங்கள் இல்லை. சாதாரணமாக பேசப்பட்ட வசனங்கள்
மனதை எள்ளளவேனும் ஏதும் செய்யவுமில்லை.(மணி அங்கிள் அதை கொஞ்சம் கவனித்திருக்கலாம்)

8) கிளைமாக்ஸ் காட்சிக்கு இன்னும் கொஞ்சம் திருப்புமுனை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்(த்ரில் அதிகரித்திருக்கும்).. ஏனென்றால் எதிர்பார்த்தது தான் கிளைமாக்ஸ் ஆனது. எனவே எனக்கு த்ரில் இல்லாமல் போனது :((
(உங்களுக்கு எப்படியோ தெரியாது)


9) விக்ரமும், ப்ரியாமணியும் தாங்களே ஹிந்தி dub: குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

10) சில பிரம்மிப்பூட்டும் இடங்களை இந்தப்படத்துக்காகவே தேடித் தேடி ஒளிப்பதிவு செய்திருக்காங்க




விஷ்ணு பகவானின் இரண்டாகப் பிளந்திருந்த சயன சிலை Locationஐ எப்படித் தேடிப்பிடித்தார்களோ தெரியல.
(அந்த இடத்துக்கு நேரே சென்று பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை .. படம் பார்த்தபோது)

11) பிரதான நடிகர்கள் இந்தப்படத்துக்காக எடுத்திருக்கும் ரிஸ்க்குகள் படம் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கச்செய்கிறது.

12) ஹனுமான் பாத்திரத்தை பிரதிபலிக்கும் கோவிந்தாவின் பாத்திரத்தை(தமிழில் கார்த்திக்) மதுப்புட்டியோடு மணி அங்கிள் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல்

குறைகளும் நிறைகளும் இருந்தாலும்
நம்பிப் பார்க்கலாம் இந்த நவீன ராமாயணத்தை..
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday, 6 May 2010

விட்டகுறை தொட்டகுறை 'திரு திரு துரு துரு'


ரொம்ப ஓவராத் தான் ஒய்வு எடுத்துட்டேன் போல பதிவுலகத்திலிருந்து ... புரியுது உங்கள் ஆதங்கம்... வலைப்பூவை எட்டிப்பார்த்துட்டு ஏமாற்றத்தோடு தொடர் கதைக்கான முடிவு கிடைக்காமல் போன அனைவரும் .... மன்னித்து மறப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு...
மீண்டும் உங்கள் அன்புச் சகோதரி- நண்பி (நான்தான்) பதிவுக்களத்தில்..
தொபுக்கடீர்னு குதித்து இனியும் ஏமாற்றாமல் இருக்க வந்திருக்கிறேன்..............
துரு துரு டயானா திரு திரு முழியுடன்.... தொடர்கிறது....

ஞாபக மீட்டலுக்காக கடந்த பதிவிலிருந்து............

//அந்த ஒருநாள் வகுப்புக்குள் திடீர்ச்சோதனை... என்னிடம் இருந்த cassette மாட்டிட்டுது..
அது ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' பாட்டு cassette ...சோதனைசெய்த மாணவத்தலைவி ''I have found it '' என்று சொல்ல....
''கண்டுபிடிச்சிட்டாய்யா கண்டுபிடிச்சிட்டாய்யா'' இப்படி மனசு வடிவேல் sytle இல்படபடக்க....
என்ன செய்றதெண்டு தெரியாம திரு திருன்னு முழித்து நின்றபோது....//



இனி

மின்னல் வேகத்துல ஒரு யோசனை .. அப்டியே ஒய்யாரமாய் மனசோரத்தில் ஆட

மாணவத்தலைவியிடம் துணிந்து பொய் சொன்னேன்...

இந்த cassette ...... (அதிபர்)SISTER 'S FEAST க்காக நடனம் பழக கொண்டுவந்தது.....என்று ஒருமாதிரி சொல்லி சமாளிச்சாச்சு என்றாலும்.... மாணவத்தலைவி என்ன விட்டபாடில்ல...
பதில வந்து SISTER 'ட்ட(அதிபர்) சொல்லு என்று கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டா.....

ஒரு மாதிரி SISTER 'ட்ட (அதிபர்) உங்கட FEAST 'க்காகத்தான் டான்ஸ் பழக CASSETTE 'ஐ திருட்டுத்தனமாக கொண்டு வந்தேன் என்று சொல்ல..அவர் என்ன ஒருக்கா மேலேயும் கீழேயும் பார்த்துட்டு....ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சிட்டு... சரி பரவாயில்ல ... ஆனா எங்க PLAYER ? CASSETTE 'ஐ மட்டும் வச்சுக்கொண்டு பிளேயர் இல்லாம எப்படி ? என்று கேட்ட கேள்வியில ஆடிப்போன நான் அரைகுறையாய் ஒரு முழுசு முழுசிப்போட்டு.... இன்னொரு பொய்யை எடுத்து விட்டேன்... என் உயிர்த்தோழி சங்கீதா கொண்டு வாறன் என்று சொன்னவ ஆனா மறந்துட்டு வந்துட்டாவாம் என்றேன்.. அடுத்து அவளையும் கூப்பிட்டு விசாரணை...

எனக்கு உசிரே போன மாதிரி ஆயிட்டுது.... அவள் என்னத்த உளறிக்கொட்டப் போறலோன்னு...
நல்லவேளை சாடிக்கேத்த முடியா அவளும் ஒரு மாதிரி சமாளிச்சா...

பாதி நம்பியும் பாதி நம்பாமலும் ஒரு மாதிரி 1/2 மணித்தியாலத்தில் எங்கள போக விட்ட SISTER (அதிபர்).... ''FEAST நாளில் நல்ல ஒரு PERFORMANCE தரவேண்டும்'' என்று கட்டளையிட்டது....மட்டும் தான் எங்கள் காதில் விழுந்தது... தப்பிச்சா போதும் என்று ஓடி வந்து வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டோம்...

பிறகென்ன இடை வேளையில்
அப்படியே மாணவிகள் புடை சூழ ''நடந்தது என்ன'' பாணியில் இருவருமாக அதிபர் அலுவலகத்துக்குள் நடந்தவற்றை விளக்கினோம்...

கதம் கதம் ..............


என்ன .... இன்னும் என்ன முடிக்க விடுறீங்க இல்ல ............ஓஓஓஓ FEAST நாளில் நாங்க PERFORM பண்ணினது எந்தப்பாட்டுக்குன்னு கேட்குறீங்களா ??
இதோ இந்தப்பாட்டுக்குதான்....ஆனா இது ''கண்டு கொண்டேன் '' படப்பாட்டு அல்ல ஏனென்றால் 1999 இல் அந்தப்படப்பாட்டுக்கள் வெளியாகவேயில்லை..உண்மையிலேயே மாட்டுப்பட்டது 'தாஜ்மஹால்' காஸ்செட்டே(CASSETTE..) ஆனால் அதன் மேலுறையில் ''கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் விரைவில்'' என இருந்தது.... ஹி ஹி..எல்லாம் ஒரு திருப்பம்தான்...

ஆசிரியர் தினத்துடன் சேர்த்தே SISTER ' ஓட FEAST ஐயும் கொண்டாடினோம் 1999 இல்...
(அறிவியல்-போட்டி காரணமாக நேரம் போதவில்லை எனவே A . R . ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியான ஒரு குட்டிப் பாட்டைத்தேர்ந்தெடுத்து பழகி ஆடினோம்)



பட்டப்பகலில் சூரியன் மந்த கதியில் காய்ந்து கொண்டிருந்தபோது... நாங்க நிலா காய்கிறது பாட்டுக்கு ... ததிங்கினத்தோம் தத்தோம் ....



இந்த 'திரு திரு துரு துரு' அனுபவம் பிடித்திருந்தால் அன்புடன் பின்னூட்டமிடுங்கள்....
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf